வவுனியா வடக்கில் மீளக்குடிய மரும் மக்கள் தமது வீடுகளைப் புனரமைத்துக் கொள்வதற்காக 12 கூரைத் தகடுகளும் 25 ஆயிரம் ரூபா நிதியும் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்படவுள்ளன. மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியும் கலந்து கொண்டார். குறித்த 35 கிராமங்களில் புனரமைப்புப் பணிகள் 40 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் வவுனியா வடக்குப் பகுதியில் அடுத்த வாரம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.
நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வவுனியா பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேவேளை, மீள்குடியமரும் மக்களின் நெற்காணிகளை துப்புரவு செய்து கொடுக்க இராணுவத்தினர் உதவி வழங்குவார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தமது வீடுகளைத் தாமாகவே புனரமைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக, கூரைத் தகடுகளும், பணமும் வழங்கப்படுகின்றன. அதேநேரம் ஏனைய உதவிகளையும் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment