Photobucket

26 August, 2009

விரிவான செய்தி வெள்ளவத்தையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை

போர் நிறைவுக்கு வந்து விட்டதாகக் கூறியதிலிருந்து கொழும்பில் தேடுதல்களும் அதிகரித்துள்ளன. அதுவும் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற வெள்ளவத்தைப் பகுதியில் அடிக்கடி போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான சிறப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்று செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றுள்ளது. இதன்போது தற்கொலைதாரிகளின் ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றைய நாள் முழுவதும் வெள்ளவத்தையின் மூலை முடுக்கு எங்கிலும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அலுவலகங்கள், வெளி வேலைகள், சந்தைகள் என புறப்பட்ட பல தமிழர்கள் சாலைகள், ஒழுங்கைகளில் வழி மறிக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் நேற்று இரவு நிலவரப்படி ஒரு பொதுமக்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. கோத்தபாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டதில் இருந்து கொழும்பின் பிற பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment