Photobucket

01 September, 2009

சிங்களன் திருந்தமாட்டான்;இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்-சீமான் பேச்சு

தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான்,

’’இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

திருக்குறளை படிக்க பள்ளியில்லாத ஊரில் திருவள்ளுவருக்குச் சிலை தேவையா? சென்னையில் சர்வக்ஞர் சிலையை திறந்து
வைத்து அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகின்றனர்.


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கா என்றும், தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை

நடத்த இந்த அரசு தயாரா?

சிங்களன் ஒருநாளும் திருந்தமாட்டான். ஏனென்றால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு
இந்தியாவை சீண்டிப் பார்ப்பான்.


உலகத்திலேயே மிகப்பெரிய ராணுவத்தை தனியொரு மனிதனாக பிரபாகரன் உருவாக்கி
வைத்திருந்தார்.விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார். அதுவரை அமைதியாக இருங்கள்’’ என்று அவர் பேசினார்.

இலங்கையில் தமிழ் மக்களின் கலாசார சின்னங்கள் அழிப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன.


இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்த கண்ணி வெடிகள் தடையாக உள்ளன. அவற்றை அகற்றிய பின்னர் தான் அங்கு மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என அதிபர் ராஜபக்சேயின் சிங்கள அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், கிளி நொச்சியிலும், அதனை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் ராணுவ வீரர்களுக்கான நினைவு சின்னங்கள் மற்றும் புத்த கோவில்களை கட்டி வருகிறது.

ஓமந்தையில் இருந்து பளைவரை ஏ9 வீதியின் இருமருங்கிலும் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகிறது.

சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ் பாணத்தின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்தர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ராணுவ முகாம் மட்டுமே இருந்தது. இன்று பவுத்த, சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் வடிவமாக யாழ்ப்பாணத்து நுழைவு வாயிலில் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியில் இருந்த மிகச்சிறிய புத்த கோவில் தற்போது பிரமாண்டமாகப் கட்டப்படுகிறது. தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்து பேரவை கட்டிடம் போன்றவை அனைத்தும் அழிக்கப்படுகிறது. அங்கிருந்த கலாசார சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன.

இதன் அருகில் இருந்த கிளிநொச்சி பொதுச்சந்தை, எண்ணை நிரப்பு நிலையம், போக்குவரத்து டெப்போ போன்ற அனைத்து இடங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு போரில் கொல்லப்பட்ட சிங்கள ராணுவ வீரர்களுக்கான சமாதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1981 ம் ஆண்டு ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்களுடன் யாழ்ப்பாண நூல் நிலையத்தை சிங்கள வெறியர்கள் தீயிட்டு கொளுத்தினர். அன்று அவர்களால் ஓர் கலாசார படுகொலை தொடங்கி வைக்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக கலாசார படுகொலைகள் கிளிநொச்சியில் அரங்கேறி வருகின்றன.

இதுவரை கிளிநொச்சி பொன்னம்பலம் வைத்திய சாலையில் இருந்து கந்தசாமி கோவிலை உள்ளடக்கி கரடிப்போக்கு சந்திவரை ராணுவ தளத்திற்கான பகுதி எனவும், அது உயர் பாதுகாப்பு வளையம் எனவும் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்பு வேலைகளுக்கும் கண்ணிவெடி பிரச்சினை கிடையாது. அது போன்று அரசாங்கத்தால் புரளி கிளப்பிவிடப்படுகிறது.

மொத்தத்தில் வன்னியை ராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த வட கிழக்கு பகுதியை சிங்கள பவுத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை என தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம்

ழத்திலிருந்துகடந்த மாத இறுதியில் இரண்டு தமிழ் கத்தோலிக்க ஆயர்கள் வந்திருந்தார்கள். அரசியல் பேச வரவில்லை, பேசவுமில்லை. தமிழகத்துப் பேராயர்கள், ஆயர்களிடம் தங்கள் மக்களின் சிலுவைப் பாதையைச் சொல்லி நம்பிக்கையும், தோழமையும் பெறவே வந்தார்கள். அறையைத் தாழிட்டு ஆயர்களோடு நெஞ்சம் திறந்த அவர்களால் அழாதிருக்க முடியவில்லை. ஆம், ஆயர்களும் அழுதார்கள். நம்பிக்கைகள் யாவும் தகர்ந்து போய்விட்டதொரு காலத்தில் மேய்ப்பர்களுக்கும் ஆறுதல் தேவையாகிறது. மானத்தை, தன்மதிப்பை உயிரினும் மேலாய் பேணியதோர் மனிதக்கூட்டம் இன்று ஒருவேளை உணவுக்காய், அவலத்தை தந்தவனிடமே பிச்சைப் பாத்திரம் ஏந்தி தலைகுனிந்து நிற்கும் அவலத்தை எந்த மேய்ப்பனால் தாங்கிக் கொள்ள முடியும்?

அக்டோபர் மாதம் அடைமழைக்காலம் தொடங்குமுன் அத்தனை மக்களும் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும். இல்லையேல் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் மக்கள் சாக நேரிடும் என எச்சரிக்கை அறிக்கையொன்று ஐ.நா.அவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாய் ஒசசஊத ஈஒபவ ஊலடதஊநந என்ற ஐ.நா.செய்தி நிறுவனத்தில் எமக்குள்ள தொடர்புகள் கூறுகின்றன. ஆனால் கிராதக ராஜபக்சே அரசின் அருகாமைக் கூலிகள் போல் ஆகிவிட்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூனும் அவரது செயலர் விஜய் நம்பி யாரும் இந்த அறிக்கை வெளி வந்து விடாதபடி அமுக்கி வைத்திருக் கிறார்களாம். தமிழர்கள் நமக்கு உலகில் இன்று நண்பர்கள் எவருமில்லை என்பது மட்டுமல்ல, நியாயத்தின் காவலர்களாய் இருக்க வேண்டியவர்கள் கூட ஒட்டுமொத்தமாய் நமக்கெதிராய் அணிவகுத்து நிற்கிறார்கள். எல் லோராலும் கைவிடப்பட்டவர் களானோம்.

மூன்று லட்சம் தமிழ் மக்கள் திறந்த வெளியில் சிறையிடப்பட்டு கடந்த வெள்ளியோடு நூறு நாட்கள் ஆயிற்று. இவர்கள் எக்குற்றமும் செய்யாதவர்கள். பலமுறை அடித்துத் துவைக்கப்பட்ட அப்பாவிகள். முக்கிய மாக, ஏழைகள். இவர்களை நூறு நாட்கள் அடைத்து வைத்திருந்தது சட்டவிரோதமான செயல். இந்த திறந்த வெளிச் சிறைகளை பேணத்தான் இந்தியாவும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுக்கிறது. தவறு, குற்றம், பாவம். இந்தியாவின் பணம் நமது பணம். தங்கள் வாழ்விடங்களில் மீண்டுமொரு சிறு வாழ்வை சூன்யம் விட்டுச் சென்ற புள்ளிகளிலிருந்து தொடங்கத்தான் நமது பணம் பயன்பட வேண்டுமேயன்றி அக்கிரமத்தின் சங்கிலிகளை மேலும் இறுக்கவும், அழுத்தி இறுக்கும் நுகத்தடிகளை அதிகமாக்கவுமல்ல. சட்டவிரோதமான பொதுமக்கள் சிறைகளைப் பேண துணைநிற்கும் நம் நாட்டு அதிகாரிகள் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிகிறார்கள். இறை நீதி இவர்தம் தலைமுறைகளை சும்மா விடாது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லா பகுதிகளும் கண்ணிவெடிகள் கொண்டிருப்பவை அல்ல. அதிகபட்சமாய் பத்து சத நிலப்பரப்பில் அவை இருக்கலாம். நேர்மை இருந்தால் கடந்த நூறு நாட்களிலேயே அப்பகுதிகளை அடையாளம் கண்டு சிவப்புக்கொடி நட்டிருக்க முடியும். மழைக்காலம் தொடங்குமுன் மக்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் மனம் இல்லை. அதனிலும் மேலாய் திறந்தவெளிச் சிறைகளிலேயே பாதித்தமிழர்கள் அழிந்தும், பலவீனமுற்று வாழத் தகுதியற்றவர்களாயும் ஆகிடவேண்டுமென ராஜபக்சே அரசு நினைக்கிறது. இதற்கு உதவத்தான் நமது ஆயிரம் கோடி ரூபாய். தமிழ் மக்களைப் போக விடு என உத்தரவிடும் ஒழுக்கம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு என்று வரும்?

இன்றுவரை முல்லைத்தீவிலிருந்து எத்தனைபேர் தப்பி வந்தார்கள், அவர்கள் பெயர் என்ன, ஊர், விபரங்கள் என்னவென்ற முறைப்படியான பதிவுகள் எதுவும் இல்லை. அதனைச் செய்வதற்கு ஐ.நா.அவை நிறுவனங்கள் எதையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க வில்லை. வலுவோடு இருக்கிற தமிழ் வாலிபர்களை இரவோடு இரவாய் தினம் எட்டு, பத்து என தீர்த்துக் கட்டும் கொடுமையை படிப்படியாய் நடத்தி முடிக்கத் தோதாகத்தான் இன்றுவரை முறைப்படியான பதிவு எதுவும் செய்யப்படவில்லை. இதனை முன்பு நாம் சொன்னபோது இங்குள்ள பெரிய ஆங்கிலப் பத்திரிகை முதலாளி "புலிகளின் பிரச்சாரகர்' என்று எள்ளினார். இந்த வாரம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிக்கோப்பு உலகை உலுக்கி, நமது அச்சங்களெல்லாம் எத்துணை உண்மையானவை என்று மீண்டும் நிரூபித்துள்ளது.

இப்படியாக எத்தனை படுகொலைகள் நடந்தன? நாம் பார்த்த ஒளிக்கோப்பு காட்டும் கொடூரம் பட்டப்பகலில் நடந்திருக்கிறது. எனில் கொடும் இரவுகளில் எத்தனை தமிழ் உயிர்கள் காற்றோடு கலந்தனவென்று எவருக்குத் தெரியும்? எனவேதான் உலக அமைப்புகளின் பார்வைக்கு வதைமுகாம்கள் வருவதை திட்டமிட்டு இலங்கை அரசு தடுத்து வருகிறது. உண்மையில் இலங்கையால் மட்டுமே முடிகிற காரியமல்ல அது. இந்தியா மட்டும் தன் வெளியுறவுக் கொள்கையில் இலங்கை மீது கொஞ்சம் இறுக்கமும், தமிழர் மீது கொஞ்சம் இரக்கமும் வைத்தால் போதுமானது. மற்றவை தானாக நடக்கும்.

இந்தியாவைப் பகைத்துக் கொண்டு ராஜபக்சே ஊழிக்கூத்தெல்லாம் ஆடமுடியாது. இந்தியா கண்ணசைத்தால் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் ராஜபக்சேவை இறுக்க அணிவகுக்கும். சீனாவிடம் கூட நேரடியாகப் பேசி சரிக்கட்டும் ராஜதந்திர வலு இந்தியாவுக்கு உண்டு. இந்தியா இன்று குறி முண்டுக் கோவணம் கட்டி ராட்டை சுற்றிய மாமனிதனின் நாடல்ல. இது பெரிய வல்லரசு. செலவழிக்கும் திறனுள்ள சுமார் 40 கோடி நடுத்தர மேல் வர்க்கங்களை கொண்ட வருங்கால உலகச் சந்தை. இந்த சந்தையின் கண் சீறல்களுக்கு வியாபாரம் செய்ய விரும்பும் நாடுகள் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆத லால்தான் இந்தியா மனது வைத்தால் நிலை மை நிச்சயம் மாறும் என நம்பிக்கையோடு சொல் கிறோம்.



இந்தியா தானாக மாறாது. தமிழகம்தான் இந்தியாவை மாற்ற முடியும், மாற்ற வேண்டும். அக்பர், அன்புடை நேரு இப்படி ஓரிருவரது காலங்கள் தவிர்த்து புதுடில்லி தர்பார் நெஞ்சிரக்கம் கொண்டு மானுடத்தை அரவணைத்ததாய் வரலாறு இல்லை. ஆனால் தமிழகம் ஒன்றுபட்டு நினைத் தால் புதுடில்லி மாறும். எனவேதான் வசைபாடு படலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மிச்சமிருக்கும் தமிழரையேனும் காத்திட எல்லா கட்சியினரும், அமைப்புகளும் இணைந்து ஒரு குரலாய் புதுடில்லியில் ஒலிக்க வேண்டுமென பாதம் விழுந்து மன்றாடுகின்றோம். உண்மையில் காங்கிரஸ் கட்சி எனக்கு பிடித்த கட்சிதான். இரண்டாம் தலை முறை தலைவர்களை அக்கட்சி அடை யாளம் கண்டு புடமிடும் காட்சி காண சிலிர்ப்பாயிருக்கிறது. நாளைய தேசம் குறித்த நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் தமிழகத்து காங்கிரஸ் பெரியோருக்கு தோழர் திருமாவளவன் மீது வருகிற கோபத்தில் கால் சதமேனும் ராஜபக்சே மீது வராதாவென்றுதான் ஒவ் வொரு நாளும் கடவுளை பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா, அதிசயம் நடத்திக் காட்டு. பேராயர்களைப் பற்றி தொடக்கத்தில் கூறியிருந்தேன்.


எனது வாழ்வில் மறக்கவே முடியாத பேராயர் ஒருவரை நான் பதிவு செய்ய வேண்டும். அவர்தான் நினைவில் வாழும் முன்னாள் மதுரை பேராயர் மரியானூஸ் ஆரோக்கியசாமி அவர்கள். மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் மேல் மட்டிலா மதிப்பும் உள்ளார்ந்த நம்பிக்கையும் கொண்டவர். எப்போது அவரை சந்தித்தாலும் கலைஞரை சிலாகிப் பார். என்னை தெரிவு செய்து மணிலா வேரித்தாஸ் வானொலிக்கு அனுப்பி வைத்ததும் அவர்தான். குருகுல வாழ்வுக்கு ஒன்பதாம் வகுப்பில் என்னைத் தேர்வு செய்ததும் அவர்தான். 14-ம் வயதில் நாங்கள் 27 பேர் தெரிவு செய்யப்பட்டோம். தேர்வு நடைமுறைகளெல்லாம் முடிந்தபின் ஆசி பெறவேண்டி பேராயர் அலுவலகம் சென்று வரிசை யில் நின்றோம். பேராயர் முன் முழந்தாள்படியிட்டு அவரது மோதிரத்தை முத்தம் செய்ய வேண்டும். பேராயர்களின் மோதிரத்தை முத்தம் செய்வது கத்தோலிக்க மக்களிடையே பொது வழக்கம். எனது முறை வந்த போது நான் முழந்தாள்படியிடவுமில்லை, மோதிரத்தை முத்தம் செய்யவுமில்லை. கரங்கள் தொழுது வணக்கம் செய்தேன்.

""என்னடா... பேராயரின் மோதிரத்தை முத்தம் செய்யத் தயக்கமா?'' என்றார். நான் எப்பதிலும் சொல்லவில்லை. முதல் நாளாகிய அன்றே என் குருகுல வாழ்வு முடிந்து போகுமென்றுதான் அருகில் நின்ற ஆசிரியப் பெருமக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மாமனிதர், மகான், தலைவர். குருகுல இயக்குநரான பின்னர் ஆயராக உயர்வு பெற்ற லியோன் தர்மராஜ் அவர்களை அன்றிரவே தனியாக அழைத்துக் கூறியிருக்கிறார், "அந்தக் காஞ்சாம்புரத்துப் பையனை கவனித்துக் கொள்ளுங்கள், வித்தியாசமான ஆளாய் வருவான் போல் தெரிகிறது' என்றிருக்கிறார்.

பௌத்த மகாநாயகதேரோவாக இருந்திருக்க வேண்டிய ஆஸ்வல்ட் கோமிஸ் என்ற சிங்களப் பேராயர் ஒருவர் போப்பாண்டவர் அரசு நடத்தும் உரோமாபுரி வரைக்கும் சென்று எப்படியாவது வேரித்தாஸ் வானொலியிலிருந்து என்னை நீக்க வேண்டுமென நீண்ட சதிசெய்த 2000-ம் ஆண்டில், கால்கள் அசைக்க முடியாமல் படுக்கையில் இருந்து கொண்டே சிங்களப் பேரினவாத இலங்கை திருச்சபையின் சதிக்கு செவிட்டிலறை கொடுத்து பின்வாங்கச் செய்த அந்தத் தலைவனை எப்படி நான் மறப்பேன்?

என்ன நடந்ததென்பது சுவாரசியமானது. உலகத் திருச்சபை, ஆசியத் திருச்சபை இரண்டையும் தன்வயப்படுத்தி சிங்களம் திமிருடன் நின்ற காலை மதுரை மாநகரில் படுக்கையில் இருந்து கொண்டே ""இலங்கையில் தமிழ்த் திருச்சபை அச்சுறுத்தப்படும் திருச்சபை. அவர்களால் அங்கு ஓங்கிக் குரல் எழுப்ப முடியாது. எனவே தான் அவர்களது குரலாய் தமிழகத் திருச்சபையும், ஆயர்களும் இங்கிருந்து பேச வேண்டியுள்ளது. ஃபாதர் ஜெகத் கஸ்பர் எனது நம்பிக்கைக்குரியவர். அவரது குரல் எனது குரல். எனது குரல் தமிழகத் திருச்சபையின் குரல். அவரை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க முடியாது'' என்று பெரிய அதிகாரிகளுக்குப் பதில் சொன்ன அந்தச் சூரியனை மனதில் நான் தொழாத நாளில்லை. எனக்காகப் பேசியதற் காகவல்ல, துன்புறும் என் இனத்திற்காகப் பேசியதால்.

சிறிலங்காவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ச்சியாக இரு மாதங்கள் வீழ்ச்சி


சிறிலங்காவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித்துறை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதுடன் 3 லட்சம் மக்களை நாசி பாணி வதை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்காவின் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யாதீர்கள் என மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியான பரப்புரை நடத்திவரும் நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களின்படி நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதித் துறையான ஆயத்த ஆடைகள் துறையின் வருமானம் கடந்த ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5.6 விழுக்காட்டினால் குறைந்துள்ளது.

மே மாத விற்பனை நிலைவரம் இதனைவிட மோசமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற விற்பனையைவிட இந்த ஆண்டு 22.23 விழுக்காடு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தில் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் ஆடைகள் வாங்குவது குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 21.6 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 2008 ஆம் ஆண்டு மே, ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 10.8 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது.

2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு தொடக்கம் காலாண்டு காலப்பகுதியில் 8.8 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அரையாண்டு முடிவில் மொத்த ஏற்றுமதி 2.4 விழுக்காட்டினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு இளவேனில் காலத்துக்கு என வழங்கப்பட்ட கொள்முதல் கட்டளைகளுக்கான துணிமணிகளை சிறிய நிறுவனங்கள் ஒக்ரோபரில் ஏற்றுமதி செய்ய தொடங்கியதும் இந்த வீழ்ச்சி சரிசெய்யப்பட்டு விடும் என ஆடை ஏற்றுமதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தேவைகள் குறைந்திருப்பதும் விலை போட்டியுமே ஆடை ஏற்றுமதி வீழ்ச்சிக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புல்மோட்டை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட 3 மாதங்களுக்குப் பின்னர் முதல் முறையாக அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டத்தில் உள்ள புல்மோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அவர்களின் உறவினர்கள் பார்வையிடுவதற்கு முதல் தடவையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைப் பார்வையிடுவதற்கு கடந்த மூன்று மாதகாலமாக அங்குள்ள உறவினர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

தமது உறவினர்களைத் தேடி புல்மோட்டைக்குச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரால் கடந்த வாரம் வரையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் தனது மகனைப் பார்வையிடுவதற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் தனது அனுபவத்தை பி.பி.சி.க்கு விபரித்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து புல்மோட்டைக்குச் சென்று தனது மகனைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்புவதற்கு தனக்கு மூன்று நாட்கள் தேவையாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

"அந்த முகாமுக்குச் செல்வது மிகவும் கடினமானதாக இருந்தது. திருகோணமலையில் இருந்து புல்மோட்டைக்குச் செல்வதற்கு ஒரேயொரு பேருந்துதான் உள்ளது. அதில் பயணிப்பதற்கே ஒரு நாள் சென்றது. அதன் பின்னர் முச்சக்கர வாகனம் ஒன்றில் மூன்று கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டி இருந்தது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு அங்கு சென்றால், மகனுடன் பேசுவதற்கு பத்து நிமிடங்கள் மட்டுமே எனக்குத் தரப்பட்டன" எனவும் அவர் கவலையுடன் கூறினார்.

புல்மோட்டையில் உள்ள முகாம்களிலும் மருத்துவமனையிலும் சுமார் 6 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த முகாம்களில் உள்ளவர்களில் சிலர் போரின் இறுதிக்காலத்தில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களாகவுள்ள அதேவேளையில் ஏனைய சிலர் வருடக்கணக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து தனது மகனைப் பார்வையிடுவதற்காக புல்மோட்டைக்கு வந்த பெண்மணி, ஊடகங்கள் அனைத்தும் வவுனியாவில் உள்ள முகாம்கள் பற்றிய செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றனவே தவிர, புல்மோட்டை முகாம்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை எனக் குற்றம் சாட்டினார்.

புல்மோட்டை முகாமிலும் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் அனைத்தும் வனியாவில் உள்ள முகாம்களுக்கு மட்டுமே சென்று பார்வையிடுகின்றன எனவும் தெரிவித்த அவர், புல்மோட்டை முகாம்களுக்கு யாராவது சென்றுள்ளது பற்றி தான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இருந்தும் புல்மோட்டைக்கு வந்தவர்கள் கடந்த வாரம் முகாம்களில் உள்ள தமது உறவுகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் தனது மகனைப் பார்வையிடுதற்காக தான் சென்றபோது அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வவுனியா முகாம்களில் சிலரும் புல்மோட்டையில் சிலருமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முகாம்களில் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமானதாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தப் பகுதியை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு கவனத்திற்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

சிங்கள ராணுவத்தின் போர்க்குற்றங்கள்:பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்திய வலிந்த தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது.

செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதிஅந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக 'ரைம்ஸ்' கூறியது.

உயிரிழப்புக்கள் அநேகமாக சிங்கள ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் 'ரைம்ஸ்' நாள் ஏடு கூறியிருந்தது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது.

இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.

எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.

போரின் கடைசிக் காலப் பகுதியில் சிங்கள ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது.

இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.

இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிங்கள ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு

தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாத கால விசாவில் வருகை தரும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய் வதனால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும் போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாத கால விசாவில் வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அவ்வாறு வருவோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக மண்டபம் தனித்துணை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனி வீடு, குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன.

இவர்கள் விசா காலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும்.

இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் கூறுகின்றனர்.


இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அகதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் முகாமில் 10 நாட்கள் வரை தங்கலாம். அதற்கும் மேல் தங்குபவர்களை அகதிகளாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது என்றனர்.

சேபியப் படுகொலைகளை விட இலங்கையில் இடம்பெற்றது கொடூரம்

சேபியாவில் 2005ம் ஆண்டில் பல இளைஞர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டனர். அப்போது வெளிவந்த திடுக்கிடும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டதும் சனல்4 தொலைக்காட்சியே. நாம் இங்கு அந்த வீடியோவை இணைத்துள்ளோம். அபோது இப் பிரச்சனை ஐ.நா வால் கையாளப்பட்டது. ஐ.நா மற்றும் உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

அரச படைகளுக்கு 58 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கொலைகளைப் பார்வையிடும்போது அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்படவில்லை, சித்திரவதைகளுக்கு உள்ளாகவில்லை, கொலைசெய்வதற்கு முன்னர் தாக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை இராணுவமோ அவை அனைத்தையும் செய்கின்றது. இருப்பினும் ஐ..நா உட்பட பல உலகநாடுகள் தொடர்ந்து மவுனம் காப்பது மிகவும் ஆச்சரியத்துக்குரியதும், வருந்தத்தக்க விடயமும் ஆகும்.