Photobucket

25 August, 2009

வவுனியா அகதி முகாம்களில் மக்களின் அவலம்

இலங்கை அரச பயங்கரவாதத்தால் வவுனியா நலன்புர நிலையங்களில் மந்தைகள் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை தமிழினம் படும் அவலங்கள் சொல்லிடங்கா. கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த கூடாரங்கள் வழியே நீர் நிறைந்து தொற்று நோய்கள் பரவியுள்ளன. வயிற்ரோட்டம் வாந்தி காய்ச்சல் சிரங்கு என பல நோய் உபாதைகளிற்கு அந்த மக்கள் அல்லல் பட்டுள்ளனர்.
அத்துடன் பல சிறார்களினது கண்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளதாகவும் இவ்விதமாக விழிகள் உடைய பலர் மரணம் அடைந்திருப்பதாகவும் அந்த முகாம் வாசிகள் சிலர் நமக்கு தெரிவித்தனர்.

மலசல கூடாங்களிற்கு செல்ல முடியாத நிலையும் அவை அங்கு சுத்தமின்றி கிடப்பதாகவும் அந்த மக்கள் எமக்கு தெரிவித்தனர்.
அத்துடன் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பிறதொரு முகாமிற்கு மாற்வுள்ளதாகவும் அவை கிளிநொச்சி அல்லது மாங்குளமாக இருக்கலாமென அவர்கள் ஜயம் தெரிவித்துள்ளன.
















No comments:

Post a Comment