Photobucket

07 September, 2009

வலி தாங்க முடியவில்லைதான்... ஆயினும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை,

1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது''.

ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.

எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.

எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.

மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.

எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.''

உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவுவீர்களா?

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே ஈழத்தமிழருக்கு உதவுவீர்களா?

மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம்.

மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழர்கள் உதவுவார்களா?

Contact to :
Manitham - Human Rights Org.
mail : manitham@gmail.com
mobile : +91-9003027712 or 9443322543 or 9003133661
Fax : +91-28133968

----
வெளிநாட்டு பணத்துடன் வந்த அகதியிடம் விசாரணை

ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர், இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க, இரண்டு மாதத்திற்கு முன் இலங்கை வந்துள்ளார்.வவுனியா முகாமில் சகோதரனையும், அவரது மனைவியையும் சந்தித்தபின் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சித்துள்ளார். இலங்கை ராணுவத்தால் சிவபாலசந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டதால், வவுனியாவிலிருந்து மன்னார் வந்து அங்கிருந்து படகில் அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.

தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அவரிடம் போலீசார் சோதனை செய்ததில், நார்வே நாணயமான குரோனி 4,700, இங்கிலாந்து பவுண்டு 25, அமெரிக்க டாலர் 2,550, இலங்கை பணம் ஒன்றரை லட்சம் மற்றும் ஒரு மொபைல்போன் இருந்தது.

அகதி சிவபாலசந்திரன் கூறும்போது, "வவுனியா முகாமில் உள்ள சகோதரனையும், அவரது மனைவியையும் முகாமில் இருந்து வெளியே அழைத்து வர அங்குள்ள ஏஜன்ட் ஒருவரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு, என்னையும் இலங்கை ராணுவத்திடம் பிடித்து கொடுத்துவிடுவதாக மிரட்டினார்.

"வேறு வழியின்றி, வவுனியாவிலிருந்து ராணுவத்திற்கு தெரியாமல் மன்னார் வந்து இங்கு அகதியாக வந்தேன். படகு கட்டணமாக ஒன்றேகால் லட்சம் ரூபாய் இலங்கை படகோட்டியிடம் கொடுத்தேன்' என்றார். அவரை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
--------------
Lankan refugee claims he is a Norwegian citizen

Madurai: A refugee who arrived in Rameswaram on Sunday, told media representatives that he was a Norwegian citizen and that he had fled to India fearing arrest by the Sri Lankan government.

Sivabalachandran (43), son of Rasaiah of Jaffna, said he went to Norway as a small boy and completed his Engineering there and later got in touch with the LTTE. He came to Sri Lanka a few weeks ago and when he came to know that the government was trying to arrest him, he went into hiding and escaped to India.

சனெல் 4 இன் வாயை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம

தயவு செய்து இந்த மடலை சிரத்தையுடன் படியுங்கள்

இல்லையேல் யாவும் கை நழுவி போக கூடும். பிரித்தானிய ஸ்ரீ லங்கன் பேரவை என்னும் சிங்கள இனவாதிகளை மட்டும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பு சானல் 4 இற்கு எதிராக குரல் கொடுக்க சகல சிங்கள மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ் புக் போன்ற பிரபல தளங்கள் ஊடாக என்றும் இல்லாதவாறு பெருமளவில் இந்த பிரசாரம் முன்னெடுக்க படுகிறது.

இப்படியான எதிர்ப்புகளை தவிர்க்க பல ஊடகங்களை ஸ்ரீ லங்கா பற்றி பாராமுகம் காட்டும் நிலைமைக்கு தள்ள படலாம்.

இன்று விடுதலை புலிகள் விட்டு சென்ற பெரும் அரசியல் இடைவெளியை நிரப்ப முடயாமல் தவிக்கும் பொழுது உலக தலைவர்களினதும் ஊடகங்களினதும் தமிழர் வாழ்வுரிமைக்கான குரல் மிக முக்கியமானதாகும்.

இந்த வழியில் சானல் 4 இன் முயற்சி இன்று ஐ நா சபை , அமெரிக்கா வரை கேட்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. அண்மையில் காட்டப்பட்ட காணொளி உலக அரங்கில் ஸ்ரீ லங்காவை அழுத்ததிற்கு உள்ளகியுள்ளதனால் சானல் 4 மீது சேறு பூச சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா எடுத்து வருகிறது.

ஏற்கனவே பிரித்தானிய தலைவர்களிடம் தனது சானல் 4 மீதான அதிருப்தியை வெளிகாடியுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அடுத்த கட்ட நகர்வாக ,

விடுதலை புலிகளின் வீழ்ச்சியுடன் அமைதியாகி விட்ட பிரித்தானிய தமிழர்களின் குறைபாட்டை தமது பலமாக்கி கோதபாய ராஜபக்சே இன் வழிபடுத்தலில் பெரும் பண உதவியோடு BSLF அமைப்பு வரும் சனிகிழமை 05 செப்ட் 2009 அன்று எதிர்ப்பியக்கம் ஒன்றை நடாத்தவுள்ளது.

இந்த நிலையில் சானல் 4 இன் வீர செயலுக்கு மதிபளிக்கும் தமிழர்களும் இலஙகையரும் இணைந்து உங்களிடம் வேண்டுவது ஊடக சுதந்திரத்துக்கான உங்கள் குரல் மட்டுமே. இந்த பொது பிரச்சனையிலாவது உங்கள் ஒன்று பட்ட ஆதரவை எதிர்பார்கிறோம்.

தமிழ் சுதந்திர போரில் நடந்த உண்மை கதைகளை வெளிக்கொண்டு வந்த சானல் 4 இற்கு என்றும் எமது நன்றியை சொல்லுவோம்!

இலங்கையின் வடக்கே இரும்பு திரைக்கு பின்னால் நடந்த படுகொலைகளை வெளி உலக்குக்கு காட்டிய சானல் 4 இற்கு என்றும் எங்கள் ஆதரவை உரத்து சொல்லுவோம் !

news@channel4.com என்ற மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதுடன் BSLF போன்ற ஸ்ரீ லங்கா அரசின் பணத்தில் முகவர்களாக செயற்படும் அமைப்பின் முயற்சிகளை கணக்கில் எடுக்காது ஊடக அடிமைப்பட்ட மக்களுக்கான குரலாக என்றும் ஒலிக்க சானல் 4 ஐ வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.


பதவியைத் தக்க வைக்கத் துடிக்கும் பான் கீமூன்

மெனிக் பாம் முகாமைப் பார்வையிடும் பான்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளைத் தாண்டி விட்டது. அவரின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது முடிய இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அவர் இப்போது அவரது பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதற்கு இருவகையான சவால்களை எதிர் கொள்கின்றார்.

ஒன்று ஐ. நா ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு
மற்றது
மேற்கு நாடுகளின் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு.

மோசமான முகாமைத்துவம்

பான் கீ மூன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்பதும் தனக்கு நெருக்கமான சில கொரிய ஆலோசகர்களுடன் மட்டும் நல்ல உறவு நிலையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு ஐநா ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் அவரது முகாமைத்துவத் திறனுக்கு பத்துக்கு இரு புள்ளிகளை மட்டும் வழங்கியது தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. Joseph Nye from Harvard University suggests: "He might ask himself whether he's got the balance quite right on speaking up verses mediating.
"I think he might ask himself if he might do a little bit more on managing the institution."

சத்தமின்றிச் சாதிக்கிறாரா ஊமையாக இருக்கிறாரா?

பான் கி மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கக் கூடியவர் என்று சிலர் அவரைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர். தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை என்பது மேற்குலக முதலாளித்துவப் பத்திரிகை என்று விட்டாலும். அல்ஜாசீரா அவர் ஊமையாக இருக்கிறார் என்று கருத்து வெளியிட்டது. அதன் கருத்து இப்படி வந்தது: "There's a difference between quiet diplomacy and non-existent diplomacy, or silent diplomacy, which is what we have at present."

இலங்கையில் விட்டது இமாலயத் தவறு.

போரை நிறுத்துவது, போரில் அகப்பட்ட பொது மக்களைப் பதுகாப்பது, போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்வது, போரினால் இடம் பெயர்ந்தோருக்கு உதவுவது இவற்றில் எந்த ஒன்றையும் ஐநாவோ அதன் உப அமைப்புக்களோ சரியாக எதையும் செய்யவில்லை.

போர் நடக்கும் போது இலங்கைக்கு செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தமை, அனுப்பிய தூதர் (வில்லன்) விஜய் நம்பியார்( இவரின் சகோதரர் இலங்கையின் இராணுவ ஆலோசகர்) இலங்கைக்கு சென்று அங்கு பேச்சு வார்த்தை நாடாத்திவிட்டு உடன் ஐநா திரும்பி உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்று இலங்கைக்கு போரை முடிக்க கால அவகாசம் கொடுப்பது போல் நேரத்தை விணாக்கியமை.

பின்னர் பாதுகாப்புச் சபைக்கு தனது பயணம் பற்றி அறிவிக்க நம்பியார் மறுத்தமை சரணடைய முயன்ற புலிகளின் அரசியல் துறையினரை பாது காக்கத் தவறியமை எல்லாமே இலங்கை விவகாரத்தில் பான் கீமூன் செய்த இமாலயத் தவறு.

நோர்வேயில் இருந்து வந்த குற்றச் சாட்டு.

சிறீலங்காவின் இராணுவ வெறியாட்டத்திற்கு அடிபணிந்தவர் ! பர்மீய இராணுவ ஆட்சியாளர் அடாவடித்தனத்தை அமைதியாகப் பார்த்தவர் ! பான் கி மூன் தனது பதவிக்குரிய ஆளுமை கொண்ட ஒருவரல்ல என்ற விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி முன்வைத்துள்ளார்.

பான் கி மூனின் பலத்த ஆளுமைக்குறைவை ஏற்கெனவே பலர் சுட்டிக்காட்டினாலும், இப்போது அது அம்பலமாகியுள்ளது.

இதுவரை மௌனமாக இருந்த நோர்வே அவர் மீது விமர்சனத்தை முன் வைத்திருப்பது உலகின் கவனத்தைத் தொட்டுள்ளது.

மேற்படி கடும் விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி மோனா யூல் தனது குறிப்புரையில் முன் வைத்திருந்ததாக நோர்வேயில் இருந்து வெளியாகும் ஆப்ரன் போஸ்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

பா. சரவணமுத்து

ஐ.நா. செயற்படும் விதம் குறித்து இலங்கையில் பெரும்பாலான மக் கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் என கருத்துத் தெரி வித்த மாற்றுக் இலங்கையின் கொள்கைகளுக்கான நிலை யத்தின் நிறைவேற்றுப் பணிப்பா ளர் கலா நிதி பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை ஜனா திபதிக்குத் தொலைபேசி அழைப்பு களை விடுப்பது மற்றும் கூட்டறிக்கை களை வெளியிடுவது போன்ற ஐ.நாவின் நடவ டிக்கைகள் மாத்திரம் போதுமானவையல்ல எனத் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.சபை யில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரி விக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர், இலங்கைக்கான விசேட பிரதி நிதி யொருவரை ஐ.நா. செயலர் பான் கீ மூன் நியமிக்கவேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

பா. சரவணமுத்தின் நாகரீகமான கிண்டல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல இலங்கை அரசையும் ஆத்திரமடையச் செய்தது.

மனம் மாறுகிறாரா பான் கீ மூன்

இலங்கை விவகாரம் தனது பதவி நீடிப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று பான் கீ மூன் இப்போது உணர்ந்துள்ளார்.

அவரது அண்மைக்கால அறிக்கைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன.

தனது பதவி நீடிப்பிற்கு பான் கீ மூன் இப்போது இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அவர் காத்திரமாக எதையாவது செய்து காட்ட வேண்டும்.

இலங்கை இந்திய சீனக் கூட்டுக்கு எதிராக அவர் இதைச் சாதிக்க வேண்டும்.