இலங்கை அரச பயங்கரவாதத்தால் வவுனியா நலன்புர நிலையங்களில் மந்தைகள் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை தமிழினம் படும் அவலங்கள் சொல்லிடங்கா. கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்த கூடாரங்கள் வழியே நீர் நிறைந்து தொற்று நோய்கள் பரவியுள்ளன. வயிற்ரோட்டம் வாந்தி காய்ச்சல் சிரங்கு என பல நோய் உபாதைகளிற்கு அந்த மக்கள் அல்லல் பட்டுள்ளனர். அத்துடன் பல சிறார்களினது கண்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளதாகவும் இவ்விதமாக விழிகள் உடைய பலர் மரணம் அடைந்திருப்பதாகவும் அந்த முகாம் வாசிகள் சிலர் நமக்கு தெரிவித்தனர்.
மலசல கூடாங்களிற்கு செல்ல முடியாத நிலையும் அவை அங்கு சுத்தமின்றி கிடப்பதாகவும் அந்த மக்கள் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பிறதொரு முகாமிற்கு மாற்வுள்ளதாகவும் அவை கிளிநொச்சி அல்லது மாங்குளமாக இருக்கலாமென அவர்கள் ஜயம் தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.
தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது. கடைசி நேரத் தாக்குதலில் இவ்விரு விமானங்களும் சிங்கள இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை பொட்டுஅம்மான், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் கேணல் தீபன் ஆகியோர் முறையே பார்வையிடுகின்றனர், மற்றும் பொட்டுஅம்மானையும், தமிழ்ச்செல்வன் அவர்களையும் விமானிகள் ஏற்றி பறப்பில் ஈடுபட்டுள்ளதையும் காணலாம்.