Photobucket

26 August, 2009

யாழ் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களின் பகிஷ்கரிப்பு

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரிக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து மாணவர்களின் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது.

யாழ் தொழில் நுட்ப கல்லூரியின் அதிபர் கல்லூரியை கல்வி நடவடிக்கைக்கள் தவிர்ந்த செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதையும், அச்செயற்பாடுகளில் ஈடுபட மாணவர்களாகிய தம்மை வற்புறுத்துவதாகவும் கூறி மாணவர்களால் ஓகஸ்ட் 18 இல் ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டமானது தொடர்ந்து நடைபெறுகின்றது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை இது தொடரும் என யா.தொ.க மாணவர்கள்ர் அறிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலின்போது யா.தொ.நு கல்லூரியை இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகம் போல அதிபர் பயன்படுத்தியதாகவும், தேர்தலுக்கான சுவரொட்டிகள், போஸ்டர்களை ஒட்டும்படி மாணாவர்களை அதிபர் வற்புறுத்தியதாகவும் கூறும் மாணவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடம்தராது, கல்வி நடவடிக்கைகள் மட்டுமே அங்கு இருக்கும் என்ற உறுதிமொழி தரப்பட வேண்டும் என்று இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அதிபர் மீது மோசடியும் சுமத்தப்பட்டுள்ளது. கல்லூரியைப் புனரமைக்கவென கொரிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணத்தை அதிபர் தவறாகப் பயனப்டுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிலர் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக்கூறப்பட்டு இலங்கை புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அதற்கு மாணவர்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அந்த மாணவர்களை போலீசார் பயமுறுத்துவதோடு, விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment