Photobucket

15 September, 2009

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக ஈழத் தமிழ்ப் பெண் கண்ணீர்!

இரவிரம் பகலிலும் சிங்கள ராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாக வவுனியா முகாமில் தங்கியிருந்து அண்மையில் விடுதலையான சுகந்தினி தேசமாணிக்கம் என்ற இந்த 22 வயதான இளம் பெண் தெரிவித்திருக்கின்றார்.

எதற்காக எங்களை இப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் சாதாரண அப்பாவி மக்கள் என்று கூறியுள்ளார்.

போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த சுகந்தினி, இந்தக் கடுமையான போரின் பின்னரும் தான் உயிருடன் இருப்பதை ஒரு அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றார். இரண்டு வருட காலமாக இடம்பெற்ற கடும் மோதல்களில் மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்த சுகந்தினியின் மூன்று மைத்துனர்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

போர்ப் பிடியிலிருந்து தப்பிவந்த இவர், கடந்த நான்கு மாத காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறிய கூடாரங்களில், பங்கீட்டு உணவுப் பொருட்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரையும் அருந்திக்கொண்டு மக்களால் நிரம்பி வழியும், முட்கட்பி வேலிகளாலும் ஆயுதம் தாங்கிய படையினராலும் சூழப்பட்ட முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்தார்.

அரசின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் விடுதலையான இவர், திருகோணமலை துறைமுகத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது தாயாரின் அரவணைப்பில் தற்போதுள்ள இவரின், கணவர் தொடர்ந்தும் இந்த முகாம்களில் ஒன்றிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

"எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரல்ல. இருந்தபோதிலும் யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமம்தான் அவரது சொந்தக் கிராமம் என்பதால்தான் அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தரைப் படையினர் தெரிவிக்கின்றார்கள். போர் இடம்பெற்ற காலத்தில் நாம் சந்தித்துக்கொண்டோம். ஆனால் இப்போது இல்லை. என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" எனவும் சுகந்தினி தெரிவித்தார்.

தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் நிலை தொடர்பாகத் தெரிவித்த சுகந்தினி, "சாக்குளால் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய கூடாரங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். அதிகளவு மக்கள் இந்த முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. முகாமில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தூக்கிச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என முகாமில் உள்ளவர்கள் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

இலங்கை ராணுவ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கக் கோரி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 14-09-09 அன்றுமனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படாததால் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதை கண்டித்தும், இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாசலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கைகோர்த்து நின்றனர். அப்போது, இலங்கை அரசை கண்டித்தும், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரியும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இலங்கை முகாம்களில் அவதிப்படும் தமிழர்களின் நிலையை நேரில் அறிய மனித உரிமைக் குழுவையும், நடுநிலைப் பத்திரிகையாளர்களையும் இலங்கைக்கு அனுப்பிவைத்து தமிழர்களை மீட்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்.


"உடைமை இழந்து வந்தவர்களின் உயிரையும் வதைப்பதா"
"தமிழர் உரிமையை நிலைநாட்டு"
"புத்தம் பேசும் சிங்களரே யுத்தம் புத்தம் சொன்னதா"
"ஐ.நா. சபையே தலையீடு செய்"
"இந்திய அரசே ஈழத் தமிழர்களுக்கு நிவாரணம் கொடு"
"தமிழக அரசே தமிழனை இழிவுபடுத்தாதே"
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தார்கள்.

13 September, 2009

காவலரண் மீது காவலிருக்கின்ற

பாடல் இடம்பெற்ற இறுவட்டு: வெஞ்சமரின் வரிகள்
பாடல் வரிகள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை
பாடலைப் பாடியவர்: நிரோஜன்
பாடலுக்கு இசை: தமிழீழ மகளிர் இசைக் குழு


‘காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே,
என் மகளே- இந்தப்
பாச உறவிங்கு பாடும் குரல் வந்து காதில் விழுமா?
என் மகளே? காதில் விழுமா என் மகளே?
சாமம் கழிகின்ற நேரம் உன் காவலரண் கூட ஈரம்
பாயும் இருக்காது மகளே படுக்க முடியாது!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

சாகும் வயதான போதும் எனக்குள்ளே
சாகப் பயம் இன்னும் மகளே,
சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே,
காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

முந்தி இரவென்ன பகலும் தனியாகப்
போகத் துணை தேடும் மகளே
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
வென்று வருகின்றாய் மகளே!

தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு
உயிரை விட வேண்டும் மகளே,
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்
பெருமையது போதும் மகளே,
பெருமையது போதும் மகளே!

நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!

(காவலரண் மீது காவலிருக்கின்ற...)

வன்னிப் படுகொலைகள் SRILANKA


10 September, 2009

தமிழீழத் தேசியக் கொடியும் புலிக் கொடியும்

“நாடு கடந்த அரசே போராட்டத்தை முன்னெடுக்கும்” என்ற தலைப்பில் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரைக்கு சில எதிர்வினைகள் வந்திருந்தன. புலிக் கொடி நாடு கடந்த அரசின் கொடியாக இருக்க முடியாது என்று நான் எழுதியிருப்பதாகவும், புலிக் கொடியை எதிர்ப்பதாகவும் கருதி சில கண்டனங்கள் வந்தன.

இதைப் பற்றி சில விளக்கங்களை சொல்வது நல்லது என்று நினைக்கிறேன்.

”புலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.

புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.

புலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.”

இந்த ஆண்டு மார்ச் கடைசியில் வெளிவந்த ஒருபேப்பரில் புலிக் கொடி குறித்து எழுதிய ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் என்னிடம் ஒரு மாற்றமும் இல்லை. புலிக் கொடி என்பது தமிழர்களின் கொடி. அது தேசம் கடந்தது. தமிழர்களின் பண்பாட்டின் சின்னம் புலிக் கொடி.

ஆனால் தமிழீழத்தின் தேசியக் கொடியை நாடு கடந்த அரசு தன்னுடைய கொடியாக கொள்ள முடியாது. மக்கள் விரும்பினாலும் கூட நாடு கடந்த “அரசு” என்பதன் அடிப்படையில் மரபுகளும் உலகின் சட்டங்களும் அதை அனுமதிக்காது.

சோழ மன்னர்களும் தமது கொடியாக புலிக் கொடியைக் கொண்டிருந்தனர். வேறு சில மன்னர்களும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைக் கொண்டிருந்தனர். தமிழீழ அரசும் தன்னுடைய நாட்டின் கொடியில் புலியை முக்கியமானதாக பொறித்திருந்தது. இந்தப் புலிக் கொடிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சோழர்களின் புலிக் கொடி பக்கவாட்டாக நிற்கின்ற புலியைக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. தமிழீழத்தின் புலிக் கொடி உறுமிக் கொண்டு பாயும் புலியின் முகத்தைக் கொண்டிருக்கிறது.

அனைத்துமே புலிக் கொடிதான் என்றாலும், வேறுவேறு நாடுகள் என்பதனால் புலிக் கொடியின் தோற்றமும் வேறுவேறானதாக இருக்கின்றது.

22 அரபு நாடுகள் இருக்கின்றன. அனைத்திலும் அரேபிய மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அந்த நாடுகளுக்கு தேசியக் கொடிகள் இருக்கின்றன. அனைத்துமே வேறுவேறு தோற்றுங்களை உடையவை. சில கொடிகள் ஒத்த தன்மையை கொண்டவையாக இருப்பினும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு அரசும் தனித்துவமான கொடிகளைக் கொண்டிருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் அவுஸ்ரேலியாவில் குடியேறி அங்கே மண்ணின் மைந்தர்களை ஒடுக்கி விட்டு ஒரு புதிய அரசை அமைத்த பொழுது, அவுஸ்ரேலியாவிற்கு என்று தனியான கொடியையே உருவாக்கினார்கள். தமது பூர்வீகத்தையும், தமது நாட்டின் அரசராக இங்கிலாந்து அரசரை ஏற்றிருப்பதையும் குறிக்கும் பொருட்டு இங்கிலாந்தின் கொடியையும் அதன் மூலையில் பொறித்தார்கள். எப்படித்தான் இருந்தாலும் அவுஸ்ரேலிய அரசை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தனியான கொடியையே அந்த அரசுக்கு உருவாக்கினார்கள்.

இப்பொழுது நாம் அமைக்கவிருக்கின்ற நாடு கடந்த அரசும் தனித்துவம் மிக்க ஒரு அரசுதான். இந்த அரசு தனித்துவமான கொடியையும் அடையாளங்களையும் கொண்டிருப்பதுதான் மரபுகளுக்கும் உலகின் சட்டங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

தமிழீழப் புறநிலை அரசை அமைப்பதாக இருந்தால் தமிழீழத் தேசியக் கொடியே புறநிலை அரசின் உத்தியோகபூர்வமான கொடியாக இருக்கும். புறநிலை அரசு என்பது தமிழீழத்தில் இயங்கிய அதே அரசு வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து இயங்குவது. அந்த வகையில் அதன் கொடி மாறப் போவது இல்லை. ஆனால் நாம் “நாடு கடந்த அரசு” என்னும் புதிய வழிமுறை ஒன்றைய திட்டமிடுகின்றோம். தற்போதைய உலக ஒழுங்குக்கு இது ஏற்றதாக இருக்கும் என்றும் நம்புகின்றோம்.

புறநிலை அரசு வேறு, நாடு கடந்த அரசு வேறு என்பதை புரிந்து கொண்டால் இந்தக் கொடி பற்றிய சந்தேகங்கள் வராது. தமிழீழ அரசின் கொடியை புலம்பெயர் மக்கள் உருவாக்குகின்ற நாடு கடந்த அரசோ அல்லது வேறு கட்டமைப்புகளோ தமது உத்தியோகபூர்வமான கொடியாக கொள்ள முடியாது.

புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை ஆதரிப்பதையும், தமிழீழமே தமது தாய் நாடு என்பதை வெளிப்படுத்துவதையும், அந்த இலட்சியத்திற்காக போராடுவதையும் குறிக்கும் பொருட்டு தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றுவதும், அதை உயர்த்திப் பிடிப்பதும் இயல்பான ஒரு விடயம். ஆனால் அதற்காக நாம் உருவாக்குகின்ற புது வகையான அரசு ஒன்றின் கொடியாக அதை பிரகடனப்படுத்த முடியாது.

நாடு கடந்த அரசின் கொடியிலும் புலி இடம் பெறலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் அது தமிழீழத் தேசியக் கொடியில் இருந்து வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக இருப்பதே சரியானது. வேண்டுமென்றால் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய அவுஸ்ரேலியக் கொடி போன்று, தமிழீழத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு கொடியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கலாம்.

நாடு கடந்த அரசுக்கு புதிய கொடி உருவாக்க வேண்டியதன் காரணம் பற்றி இம் முறை எழுதியிருப்பதை வாசகர்கள் சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் இன்றைய பணி: விடுதலைப்புலிகள் ஜனநாயகத் தலைமை ஏற்பதை உலகம் அங்கீகரிக்க செய்ய வேண்டும்.

உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல.

சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர்.

ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தன சிங்கள அரசும் அதன் ஆயுதப்படைகளும்.

முதலாவது கிளர்ச்சியை அடக்கியவர் இன்றைய மகிந்த ராஜபக்ச கட்சியின் அப்போதைய தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. பின்னைய கிளர்ச்சியை அடக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணசிங்க பிரேமதாச.

1989 இல் ஜேவிபியின் தலைமை சிங்கள அரச படைகளால் அழிக்கப்பட்டதோடு அதன் கதை முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜேவிபி உயிர்ப்புப் பெற்றது. ஆனால் அதன் பயணப் பாதை இனவாத அரசியல் சார்ந்த ஜனநாயகப் பாதை என்று சொல்லிக் கொள்ளும் வகைக்கு இருப்பது என்னவோ தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிஸ்டம் தான்.

இருந்தாலும் ஜே வி பியின் வரலாறு.. ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னான வீழ்ச்சியும் சமீப பத்தாண்டுகளில் அவர்கள் கண்டுள்ள ஜனநாயக எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக அரசியல் - இராணுவ பரிமானத்தோடு வளர்ந்திருந்து இன்று ஒட்டுமொத்த உலகால் இராணுவ பலத்தை இழக்கச் செய்யப்பட்டு நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நல்ல மீள்வுக்கான உதாரணம் என்று கொள்வதில் தப்பில்லை.

அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல கோரிக்கை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போல் திடமாக உறுதியோடு போராடியவர்களும் யாரும் இலர். அவர்களைப் போல பேச்சு மேடைகளில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தோரும் யாரும் இலர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயகத் தலைமையை ஏற்க முன்வருவதோடு அதனை ஜனநாயகத்தை உச்சரிக்கும் இந்த உலகம் ஏற்கவும் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய வாதத்தினால் ஆயுதக் கிளர்ச்சிகள் திட்டமிட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. இந்திய தேசியம் என்பது தமிழீழத்தின் உருவாக்கத்திற்கு உதவக் கூடிய ஒரு காரணி அன்று. அதன் வீழ்ச்சியே சோவியத் வீழ்ச்சியோடு பல சுதந்திர தேசங்கள் பிறந்தது போல தமிழீழமும் பிறப்பெடுக்க உதவும். அதுவரை தமிழர்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சாணக்கிய அரசியலை செய்ய வேண்டிய நிலை ஒன்று இருக்கிறது.

சிங்கள பேரினவாத அரசிற்கு.. இந்திய தேசியத்திற்கு வால்பிடிக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் எதனையும் அரசியல் ரீதியாக பெறவும் முடியாது சாதிக்கவும் முடியாது.

இந்தியாவில் பஞ்சாப்பில் சீக்கியர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் காஷ்மீரில் தனிநாட்டுக்கான முஸ்லீம்களின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றிகளை சாதிக்காத தன்மையாக இருக்கட்டும்.. பலஸ்தீனத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கம் சிதறிடிக்கப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டதாக இருக்கட்டும் இவற்றின் பின்னாலான அந்தந்த போராளிகளின் நடவடிக்கைகள் என்பது வெறும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விடுவதாக இருக்கவில்லை.

வீழ்ச்சிகளில் இருந்து துரித கதியில் மீண்டு அவர்கள் இன்று ஜனநாய வழியில் தமது மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் சிறீலங்காவில் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருப்பதுடன் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதைக் கூட சிங்கள அரசுகள், கட்சிகள் மற்றும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் விரும்பவில்லை.

ஜே வி பியின் வீழ்ச்சியோடு அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த சிங்கள அரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுடன் வாழ்ந்த மக்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முன் வரவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அண்மையில் இன, மொழி ரீதியான பெயர்களுடன் கூடிய கட்சிகளின் இருப்பையும் உதயத்தையும் சட்டவிரோதமாக்கி இலங்கைத் தீவில் இருக்கும் சிறுபான்மை மக்களின் பல்லின அடையாளங்களையும் ஜனநாயக உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயன்று வருகின்றது.

தற்போது அந்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று சிங்கள சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.. சிங்கள அரசின் உண்மையான செயலுரூபத்தை அதன் இந்த ஒரு ஜனநாயக பண்பழிப்புச் செயற்பாடே உறுதிப்படுத்தப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வீழ்ச்சி என்பது ஏற்படுத்தி இருக்கும் ஒரு சூனியத்துள் இருந்து அல்லது அரசியல் வெற்றிடத்தில் இருந்து அவர்களை மீட்டு வர வேண்டும்.. மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் முன் உதயமாவதே அதற்கு சிறப்பான வழி ஆகும். அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சவாலாக அமைவதோடு தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகள் ஜனநாயக வழியில் வெல்லப்படக் கூடிய சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு முயற்சிகளை இதய சுத்தியோட மேற்கொள்ள உதவியாகவும் அமையும்.

சந்தர்ப்பவாத, காட்டிக்கொடுப்பு, ஆயுத அரசியல் செய்யும் சிங்கள அரசோடு ஒட்டிப் பிழைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களிடம் எந்த தெளிவான தமிழ் மக்களிற்கு என்றான அரசியல் அபிலாசையும் கிடையாது.தமிழ் மக்களிற்காக பேரம் பேசக் கூடிய திறனும் அவர்களிடம் இல்லை.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூட ஒரு உருப்படியான செயற்பாடின்றிய ஒரு வகை உறைநிலையில் இருக்கும் கட்சியாகவே தோற்றமளிக்கிறது. அக்கட்சியின் உறைநிலை சிதறும் போது அதன் அங்கத்தவர்களின் உண்மை முகமும் தெரிய வரும். அது நிச்சயம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல உதவாது. அந்த உறுப்பினர்களின் சொந்த அரசியல்.. எதிர்காலத்தை நிச்சயிக்கும் விதமாகவே அது பெரும்பாலும் அமையும்.

எனவே தமிழ் மக்களுக்கு இன்று வேண்டியது.. திறந்த வெளிச் சிறைகளில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுற்கும் ஒரு வலுவான ஜனநாயக அரசியற் தலைமை. அதை விடுதலைப்புலிகள் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் களத்தில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக உலகின் முன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக வழியில் செயற்பட இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவ ஒரு கோரிக்கயை முன் வைத்து அதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவக் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் செய்பவர்கள்.. சிறீலங்காவின் ஜனநாயக அழிப்பே நடந்து கொண்டிருக்கும் போது அதை ஊக்குவிப்பதுமின்றி கண்டும் காணாதது போலவும் இருக்கின்றனர். இவர்களின் இரட்டை வேடங்களையும் தமிழ் மக்கள் தோலுரித்துக் காட்டி அவர்களின், இந்த உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி தமிழ் மக்களின் உண்மையான அரசியல் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

அப்போதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு இந்திய தேசியத்தின் அழுத்ததால் உலகெங்கும் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை அழிக்க முடியும். அதன் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக அரசியலுக்குள் செயலிறக்கி தமிழ் மக்கள் தமது நீதியான நேர்மையான விருப்புக்குரிய ஜனநாயக அரசியல் உரிமையை தன்னாட்சி உரிமையை வெற்றி கொள்ள முயற்சிக்க முடியும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து போய்விட்டது.. எனி என்ன இருக்கிறது.. என்று ஒட்டுக்குழுக்களின், காலம் காலமாக தமிழ் மக்களை கொன்ற பயங்கரவாத தடைச்சட்டம், சிறீலங்காவின் அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களித்தே வயிறு வளர்த்த நரைத்த தாடிகளைக் கொண்ட காட்டிக் கொடுப்பாளர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக சித்தரிக்க முயல்வது தமிழ் மக்கள் தம்மை தாமே மீள முடியாத படுகுழியில் தள்ளி அரசியல் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

களத்திலும் புகலிடத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே இவை குறித்து சிந்தியுங்கள். விரைந்து ஒற்றுமையோடு, மாவீரர்களும், மாண்டு போன மக்களும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களின் உள்ளங்களுள் ஒழிந்திருக்கும் உணர்வுகளும் சொன்ன, சொல்லும் பாதையில் நடக்க ஒரே இலட்சியத்தோடு செயற்படுங்கள். இதுவே எமது இனத்தின் அரசியல் விடிவுக்கான இன்றைய முதற் தேவையும் கூட.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வன்னி முகாமில் இருந்து தப்பி வந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கொழும்பில் கைது


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிச் சண்டை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி வரை நின்று இவர் சண்டையிட்டவர் என்றும், பின்னர் காயமடைந்ததால் மக்களுடன் மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்த சமயம் படையினருக்கு கையூட்டு கொடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து வந்தார் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு, கல்கிசைப் பகுதியில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்தும் சுவரொட்டிகள்! பொலிஸார் நள்ளிரவில் அகற்றம்



விருதுநகர், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அதை அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

08 September, 2009

ஈழத் தமிழர்கள்-காங். எம்.பிக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம்.

டோரன்டோ: தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா? இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.

அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.

சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.

ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.

இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.

திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.

அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.

சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.

தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?

இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...

கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.

'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.

1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்

2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்

3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்

4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்

5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.

காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."

இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்? இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா? தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.

Tags: lanka tamils, sudarsana nachiappan, canada padaipaligal kazhagam, cong, condemn, இலங்கைத் தமிழர்கள், சுதர்சன நாச்சியப்பன், கனடா படைப்பாளிகள் கழகம், காங்கிரஸ், கண்டனம்.

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



ஈ-மெயிலில் வந்தது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி
தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி

புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்: ஐ.நா. உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு உத்தரவு

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர், கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து பணியாற்றி வந்தார். இவர் யுனிசெப்' செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடந்து வந்தபோது, போரில் குழந்தைகள் சிக்கி தவிப்பது குறித்து ஜேம்ஸ் எல்டர் அடிக்கடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் எல்டரை இலங்கையை விட்டு உடனே வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இலங்கையில் 2010 ம் ஆண்டுவரை வசிப்பதற்கான விசாவை ஜேம்ஸ் எல்டர் வைத்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், ஐ.நா. சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஜேம்ஸ் எல்டரின் விசா, வருகிற 21 ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக குடியேற்றப்பிரிவு அதிகாரி பி.பி.அபய்கூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டர், குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவினர் சார்பில் குரல் கொடுத்து வந்ததாக யுனிசெப்' பிராந்திய தகவல் தொடர்பு தலைவர் சாரா க்ரவ் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் எல்டரின் விசா நிலவரம் குறித்த கூடுதல் தகவல்களை யுனிசெப்' கேட்டுள்ளது.

மகிந்தவுடன் த.தே.கூ. 2 மணி நேரம் பேச்சு: மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்து


வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது.
மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார்.

இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களில் சென்று வசிப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மகிந்த, அது தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 5:00 மணியளில் தொடங்கிய பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று கலந்துகொண்டது.

பேச்சுவார்ததைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சிறிலங்கா அரச தலைவருடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. இதில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் முக்கியமாகக் குறிப்பிட்டோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் வேலைத்திட்டம் ஒன்றில் மீள்குடியேற்றுவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையில் அதில் 10 வீதமானவர்களைக் கூட அரசு மீள்குயேற்றவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனால் இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என நாம் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.

அவர்கள் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவேண்டிய தேவை இருப்பதாக நீண்ட ஒரு விளக்கத்தைத் தந்தார்கள். ஆனால், கண்ணிவெடிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களை முதலில் குடியேற்றக் கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

இதனைவிட வவுனியாவில் உள்ள முகாம்களில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். இங்குள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வசிப்பதற்கு விரும்பினால் அவர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதிப்பது அவசியம் எனவும் நாம் தெரிவித்தோம்" என சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, இவ்வாறான அறிவித்தல் ஒன்றை தாம் ஏற்கனவே வெளியிட்டிருப்பதாகவும் மேலும் அது தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி முகாமில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியா முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக மகிந்த வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபனமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள். இதனை மகிந்த ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இன்றைய சந்திப்பின்போது அது தொடர்பாக விரிவாக ஆராயப்படவில்லை. எதிர்வரும் சந்திப்புக்களில் இது தொடர்பாக ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

மகிந்தவுடனான இந்தப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பாக பசில் ராஜபக்ச தலைமையிலான அரச தலைவர் பணிக்குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது. இன்றைய பேச்சுக்கள் தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு திருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் மகிந்தவுடன் சுசில் பிரேம் ஜயந்த, ரிசாத் பதியுதீன், மகிந்தவின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு நலன்புரி முகாம்களுக்குப் பொறுப்பான படைத்தளபதி ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, சிவசக்தி ஆனந்தன், ஐ.எம்.இமாம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

07 September, 2009

வலி தாங்க முடியவில்லைதான்... ஆயினும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை,

1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது''.

ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.

எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.

எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.

மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.

எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.''

உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவுவீர்களா?

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே ஈழத்தமிழருக்கு உதவுவீர்களா?

மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம்.

மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழர்கள் உதவுவார்களா?

Contact to :
Manitham - Human Rights Org.
mail : manitham@gmail.com
mobile : +91-9003027712 or 9443322543 or 9003133661
Fax : +91-28133968

----
வெளிநாட்டு பணத்துடன் வந்த அகதியிடம் விசாரணை

ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர், இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க, இரண்டு மாதத்திற்கு முன் இலங்கை வந்துள்ளார்.வவுனியா முகாமில் சகோதரனையும், அவரது மனைவியையும் சந்தித்தபின் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சித்துள்ளார். இலங்கை ராணுவத்தால் சிவபாலசந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டதால், வவுனியாவிலிருந்து மன்னார் வந்து அங்கிருந்து படகில் அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.

தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அவரிடம் போலீசார் சோதனை செய்ததில், நார்வே நாணயமான குரோனி 4,700, இங்கிலாந்து பவுண்டு 25, அமெரிக்க டாலர் 2,550, இலங்கை பணம் ஒன்றரை லட்சம் மற்றும் ஒரு மொபைல்போன் இருந்தது.

அகதி சிவபாலசந்திரன் கூறும்போது, "வவுனியா முகாமில் உள்ள சகோதரனையும், அவரது மனைவியையும் முகாமில் இருந்து வெளியே அழைத்து வர அங்குள்ள ஏஜன்ட் ஒருவரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு, என்னையும் இலங்கை ராணுவத்திடம் பிடித்து கொடுத்துவிடுவதாக மிரட்டினார்.

"வேறு வழியின்றி, வவுனியாவிலிருந்து ராணுவத்திற்கு தெரியாமல் மன்னார் வந்து இங்கு அகதியாக வந்தேன். படகு கட்டணமாக ஒன்றேகால் லட்சம் ரூபாய் இலங்கை படகோட்டியிடம் கொடுத்தேன்' என்றார். அவரை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
--------------
Lankan refugee claims he is a Norwegian citizen

Madurai: A refugee who arrived in Rameswaram on Sunday, told media representatives that he was a Norwegian citizen and that he had fled to India fearing arrest by the Sri Lankan government.

Sivabalachandran (43), son of Rasaiah of Jaffna, said he went to Norway as a small boy and completed his Engineering there and later got in touch with the LTTE. He came to Sri Lanka a few weeks ago and when he came to know that the government was trying to arrest him, he went into hiding and escaped to India.

சனெல் 4 இன் வாயை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம

தயவு செய்து இந்த மடலை சிரத்தையுடன் படியுங்கள்

இல்லையேல் யாவும் கை நழுவி போக கூடும். பிரித்தானிய ஸ்ரீ லங்கன் பேரவை என்னும் சிங்கள இனவாதிகளை மட்டும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பு சானல் 4 இற்கு எதிராக குரல் கொடுக்க சகல சிங்கள மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ் புக் போன்ற பிரபல தளங்கள் ஊடாக என்றும் இல்லாதவாறு பெருமளவில் இந்த பிரசாரம் முன்னெடுக்க படுகிறது.

இப்படியான எதிர்ப்புகளை தவிர்க்க பல ஊடகங்களை ஸ்ரீ லங்கா பற்றி பாராமுகம் காட்டும் நிலைமைக்கு தள்ள படலாம்.

இன்று விடுதலை புலிகள் விட்டு சென்ற பெரும் அரசியல் இடைவெளியை நிரப்ப முடயாமல் தவிக்கும் பொழுது உலக தலைவர்களினதும் ஊடகங்களினதும் தமிழர் வாழ்வுரிமைக்கான குரல் மிக முக்கியமானதாகும்.

இந்த வழியில் சானல் 4 இன் முயற்சி இன்று ஐ நா சபை , அமெரிக்கா வரை கேட்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. அண்மையில் காட்டப்பட்ட காணொளி உலக அரங்கில் ஸ்ரீ லங்காவை அழுத்ததிற்கு உள்ளகியுள்ளதனால் சானல் 4 மீது சேறு பூச சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா எடுத்து வருகிறது.

ஏற்கனவே பிரித்தானிய தலைவர்களிடம் தனது சானல் 4 மீதான அதிருப்தியை வெளிகாடியுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அடுத்த கட்ட நகர்வாக ,

விடுதலை புலிகளின் வீழ்ச்சியுடன் அமைதியாகி விட்ட பிரித்தானிய தமிழர்களின் குறைபாட்டை தமது பலமாக்கி கோதபாய ராஜபக்சே இன் வழிபடுத்தலில் பெரும் பண உதவியோடு BSLF அமைப்பு வரும் சனிகிழமை 05 செப்ட் 2009 அன்று எதிர்ப்பியக்கம் ஒன்றை நடாத்தவுள்ளது.

இந்த நிலையில் சானல் 4 இன் வீர செயலுக்கு மதிபளிக்கும் தமிழர்களும் இலஙகையரும் இணைந்து உங்களிடம் வேண்டுவது ஊடக சுதந்திரத்துக்கான உங்கள் குரல் மட்டுமே. இந்த பொது பிரச்சனையிலாவது உங்கள் ஒன்று பட்ட ஆதரவை எதிர்பார்கிறோம்.

தமிழ் சுதந்திர போரில் நடந்த உண்மை கதைகளை வெளிக்கொண்டு வந்த சானல் 4 இற்கு என்றும் எமது நன்றியை சொல்லுவோம்!

இலங்கையின் வடக்கே இரும்பு திரைக்கு பின்னால் நடந்த படுகொலைகளை வெளி உலக்குக்கு காட்டிய சானல் 4 இற்கு என்றும் எங்கள் ஆதரவை உரத்து சொல்லுவோம் !

news@channel4.com என்ற மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதுடன் BSLF போன்ற ஸ்ரீ லங்கா அரசின் பணத்தில் முகவர்களாக செயற்படும் அமைப்பின் முயற்சிகளை கணக்கில் எடுக்காது ஊடக அடிமைப்பட்ட மக்களுக்கான குரலாக என்றும் ஒலிக்க சானல் 4 ஐ வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.


பதவியைத் தக்க வைக்கத் துடிக்கும் பான் கீமூன்

மெனிக் பாம் முகாமைப் பார்வையிடும் பான்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளைத் தாண்டி விட்டது. அவரின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது முடிய இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அவர் இப்போது அவரது பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதற்கு இருவகையான சவால்களை எதிர் கொள்கின்றார்.

ஒன்று ஐ. நா ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு
மற்றது
மேற்கு நாடுகளின் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு.

மோசமான முகாமைத்துவம்

பான் கீ மூன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்பதும் தனக்கு நெருக்கமான சில கொரிய ஆலோசகர்களுடன் மட்டும் நல்ல உறவு நிலையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு ஐநா ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் அவரது முகாமைத்துவத் திறனுக்கு பத்துக்கு இரு புள்ளிகளை மட்டும் வழங்கியது தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. Joseph Nye from Harvard University suggests: "He might ask himself whether he's got the balance quite right on speaking up verses mediating.
"I think he might ask himself if he might do a little bit more on managing the institution."

சத்தமின்றிச் சாதிக்கிறாரா ஊமையாக இருக்கிறாரா?

பான் கி மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கக் கூடியவர் என்று சிலர் அவரைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர். தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை என்பது மேற்குலக முதலாளித்துவப் பத்திரிகை என்று விட்டாலும். அல்ஜாசீரா அவர் ஊமையாக இருக்கிறார் என்று கருத்து வெளியிட்டது. அதன் கருத்து இப்படி வந்தது: "There's a difference between quiet diplomacy and non-existent diplomacy, or silent diplomacy, which is what we have at present."

இலங்கையில் விட்டது இமாலயத் தவறு.

போரை நிறுத்துவது, போரில் அகப்பட்ட பொது மக்களைப் பதுகாப்பது, போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்வது, போரினால் இடம் பெயர்ந்தோருக்கு உதவுவது இவற்றில் எந்த ஒன்றையும் ஐநாவோ அதன் உப அமைப்புக்களோ சரியாக எதையும் செய்யவில்லை.

போர் நடக்கும் போது இலங்கைக்கு செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தமை, அனுப்பிய தூதர் (வில்லன்) விஜய் நம்பியார்( இவரின் சகோதரர் இலங்கையின் இராணுவ ஆலோசகர்) இலங்கைக்கு சென்று அங்கு பேச்சு வார்த்தை நாடாத்திவிட்டு உடன் ஐநா திரும்பி உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்று இலங்கைக்கு போரை முடிக்க கால அவகாசம் கொடுப்பது போல் நேரத்தை விணாக்கியமை.

பின்னர் பாதுகாப்புச் சபைக்கு தனது பயணம் பற்றி அறிவிக்க நம்பியார் மறுத்தமை சரணடைய முயன்ற புலிகளின் அரசியல் துறையினரை பாது காக்கத் தவறியமை எல்லாமே இலங்கை விவகாரத்தில் பான் கீமூன் செய்த இமாலயத் தவறு.

நோர்வேயில் இருந்து வந்த குற்றச் சாட்டு.

சிறீலங்காவின் இராணுவ வெறியாட்டத்திற்கு அடிபணிந்தவர் ! பர்மீய இராணுவ ஆட்சியாளர் அடாவடித்தனத்தை அமைதியாகப் பார்த்தவர் ! பான் கி மூன் தனது பதவிக்குரிய ஆளுமை கொண்ட ஒருவரல்ல என்ற விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி முன்வைத்துள்ளார்.

பான் கி மூனின் பலத்த ஆளுமைக்குறைவை ஏற்கெனவே பலர் சுட்டிக்காட்டினாலும், இப்போது அது அம்பலமாகியுள்ளது.

இதுவரை மௌனமாக இருந்த நோர்வே அவர் மீது விமர்சனத்தை முன் வைத்திருப்பது உலகின் கவனத்தைத் தொட்டுள்ளது.

மேற்படி கடும் விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி மோனா யூல் தனது குறிப்புரையில் முன் வைத்திருந்ததாக நோர்வேயில் இருந்து வெளியாகும் ஆப்ரன் போஸ்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

பா. சரவணமுத்து

ஐ.நா. செயற்படும் விதம் குறித்து இலங்கையில் பெரும்பாலான மக் கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் என கருத்துத் தெரி வித்த மாற்றுக் இலங்கையின் கொள்கைகளுக்கான நிலை யத்தின் நிறைவேற்றுப் பணிப்பா ளர் கலா நிதி பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை ஜனா திபதிக்குத் தொலைபேசி அழைப்பு களை விடுப்பது மற்றும் கூட்டறிக்கை களை வெளியிடுவது போன்ற ஐ.நாவின் நடவ டிக்கைகள் மாத்திரம் போதுமானவையல்ல எனத் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.சபை யில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரி விக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர், இலங்கைக்கான விசேட பிரதி நிதி யொருவரை ஐ.நா. செயலர் பான் கீ மூன் நியமிக்கவேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

பா. சரவணமுத்தின் நாகரீகமான கிண்டல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல இலங்கை அரசையும் ஆத்திரமடையச் செய்தது.

மனம் மாறுகிறாரா பான் கீ மூன்

இலங்கை விவகாரம் தனது பதவி நீடிப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று பான் கீ மூன் இப்போது உணர்ந்துள்ளார்.

அவரது அண்மைக்கால அறிக்கைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன.

தனது பதவி நீடிப்பிற்கு பான் கீ மூன் இப்போது இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அவர் காத்திரமாக எதையாவது செய்து காட்ட வேண்டும்.

இலங்கை இந்திய சீனக் கூட்டுக்கு எதிராக அவர் இதைச் சாதிக்க வேண்டும்.

06 September, 2009

வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் இருந்து இவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் சொல்லுவதை மறுத்து வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் வழங்கு தொடர்ந்தாலும், அதை சந்திக்க நான் தயார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பணத்தை எப்படி பெற்றார்கள். யார் மூலம் பெற்றார்கள். இதற்கு கனடாவில் உள்ள ஒரு நபர் உதவியிருக்கிறார். அதற்கான சாட்சியும் என்னிடம் இருக்கிறது. தேவை வரும்போது அதை வெளியிடுவேன் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது,

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடருவேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்ததற்கு தங்கள் குழுவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினோம்.

தானியங்கி பணபட்டுவாடா எந்திரத்தில் (ஏடிஎம்) வாடிக்கையாளர்களுக்கு ரசீது கிடைப்பது போல, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு ரசீது கிடைக்க செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்த முதல்வராக இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் வர வேண்டும். கிறிஸ்தவர் முதல்வராக வரக்கூடாது. ஏனென்றால் அம்மாநிலத்தில் இந்துக் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்து மதத்தை காப்பாற்றவும், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சனைகளை முன்னிறுத்தவும், பிஜேபியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், 2011 சட்டசபை தேர்தல் வரை இந்த பிரச்சாரம் நடைபெறும் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.

பெல்ஜியம் நாடு சோனியாவுக்கு ஒரு விருதை வழங்கியிருக்கிறது. இது வெறும் அலங்காரத்துக்கானது என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு பதவி என்றால், சோனியாவின் எம்.பி. பதவியை தகுதி இழக்க செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.

பத்மநாதனை மலேசியாவே கைது செய்து சிறிலங்காவிடம் ஒப்படைத்தது: ஆங்கில இணையத்தளம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதன் முன்னர் கூறப்பட்டது போன்று கடந்த ஓகஸ்ட் மாதம் 6 ஆம் நாள், சிறிலங்காப் படையினரும் அதன் புலனாய்வுத்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்படவில்லை என்று கொழும்பில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன், தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் சிறிலங்காப் படையினரிடம் கையளிக்கப்பட்டார் என்பதை சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார் என 'லங்கா நியூஸ் வெப்' என்ற அந்த இணையத் தளம் தெரிவித்துள்ளது.

அந்தச் செய்தியின் முக்கிய விபரம் வருமாறு:

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில கெந்த விதாரனவின் மேற்பார்வையின் கீழ் பத்மநாதன் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

பத்மநாதனின் கைது விடயத்தில், மலேசியாவில் உள்ள பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா முக்கிய பங்காற்றி இருக்கின்றார். மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அவர் விசாரணை நடத்திய அது பற்றி சிறிலங்காவில் உள்ள அதிகாரிகளுக்கு அடிக்கடி தகவல்களைக் கொடுத்து வந்தார்.

மலேசியாவிற்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பாக, உதய பெரேரா மிகக் கவனமாக ஆராய்ந்து வந்தார். அது பற்றி மலேசிய அதிகாரிகளுடனும் அவர் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வந்தார்.

பத்மநாதன் போன்ற விடுதலை புலிகளின் தலைவர்கள் மலேசியாவில் தங்கியிருப்பது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உதய பெரேரா மலேசிய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக எச்சரிக்களை விடுத்து வந்தார்.

இத்தகைய பின்னணியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மலேசிய சிறப்பு புலனாய்வுத்துறை கவனமாக அவதானித்து வந்தது.

அதன் பின்னர், பத்மநாதனை கைது செய்து தருமாறு மலேசிய அரசுக்கு அதிகாரபூர்வமான கோரிக்கை ஒன்றை சிறிலங்கா அரசு விடுக்க வேண்டும் என்று உதய பெரேராவைத் தொடர்புகொண்ட மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சிங்கப்பூரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, பத்மநாதனை கைது செய்து தருமாறு அதிகாரபூர்வ கடிதம் ஒன்றை மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் ஜூலை மாதத்தில் கையளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்ததும், கிழக்கு மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களான ராம் மற்றும் நகுலன் ஆகியோருக்கு பத்மநாதன் ஏற்படுத்திய தொலைபேசி அழைப்பு ஒன்றின் அடிப்படையில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் அவர் மலேசியாவில் தங்கியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

கிழக்குத் தலைவர்களுடன் தொடர்புகொள்ள பத்மநாதன் பயன்படுத்திய செய்மதித் தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்த சிறிலங்காப் புலனாய்வுத்துறையினர், மேலதிக விசாரணைகளுக்காக அதனை அமெரிக்க மற்றும் மலேசிய தொடர்பாடல் நிபுணர்களிடம் கையளித்தனர்.

அதேசமயத்தில் மலேசியாவில் 'சனல் - 4' செய்தி நிறுவனத்திற்கு பத்மநாதனால் வழங்கப்பட்ட நேர்காணல் குறித்து மலேசிய சிறப்பு புலனாய்வுத்துறையும் விசாரணைகளை நடத்திவந்தது.

அதன் பின்னர் பத்மநாதன் எங்கு இருக்கிறார் என்பதை மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் கண்டறிந்தனர். கோலாலம்பூரில் உள்ள ரியூன் நட்சத்திர விடுத்தியில் அவர் தங்கியிருந்த சமயம் அவரைச் சுற்றிவளைத்தனர். அவரது வாகன சாரதி அப்புவையும் கைது செய்தனர். அந்த சமயம் பத்மநாதன் வேறு இருவருடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். அதனையடுத்து அப்புவை பத்மநாதனுக்கு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்படுத்தி அவசரமான விடயம் என்று கூறுமாறு மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் நிர்ப்பந்தித்துள்ளனர்.

அப்பு கூறிய அவரச நிலை என்ன என்பதை பார்ப்பதற்காக வந்துகொண்டிருந்த வழியில் கேபி எனப்படும் செல்வராசா பத்மநாதனை மலேசிய சிறப்புப் புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர்.

இவ்வாறு அந்தச் செய்தி கூறுகின்றது.

05 September, 2009

பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?


கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் ‘என் அருமை ஈழமே’ தொகுப்பை முன்வைத்து...

அவர்கள்
ஆயுதங்கள் ஏந்தியது அறவழிலாகாது
தெரியும் எனக்கு.
அவர்களை ஆயுதங்கள் ஏந்த வைத்தவர்கள்
அவர்களை அப்படி ஆக்கியதை
என்னோடு சேர்ந்து
ஆயுதங்களும் இரத்தச் சிந்தல்களும்
மரணங்களும் காயங்களும் துயரங்களும்
வன்மையாகக் கண்டிக்கின்றன.

பல வண்ணங்களைக் காட்டும் ’கலைடாஸ்கோப்’ போல பல்வேறு நிகழ்வுகளையும் சூழல்களையும் சிந்திக்கத் தூண்டும் கவிஞர் தமிழன்பனின் மேற்கண்ட வரிகளோடு இந்நூல் மதிப்பீட்டைத் தொடங்கலாம்.

ஈழத்தமிழர்களிடமிருந்து ‘சுதந்திர உருப்படிகள் உடைத்தெறியப்பட்டபோது, அவர்களின் புல்லாங்குழல்களிலிருந்து புறப்பட்டன தோட்டாக்கள்’ என்று அவர்கள் ஆயுதம் தரித்த காரணத்தைக் கவித்துவத்தோடு தமிழன்பன் வருணிக்கிறார்.

புல்லாங்குழல்கள் துப்பாக்கிகளாய்ப் புகைந்த காலத்திற்கும் முன்னால் தந்தை செல்வாவின் தலைமையில் நடந்த அமைதிப் போராட்டங்களையும் தமிழன்பன் நினைவு கூர்கிறார். அமைதிப் புறாவின் சிறகுகளைத் துண்டிப்பது சிங்கள அரசின் வழிமுறையாகிய பின்னர், தமிழ் இளைஞர்கள் ஆயுதங்கள் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர் என்பதுதான் வரலாறு.

1983 இல் இலங்கையில் மூண்ட கலவரங்களும், அதன் தொடர்ச்சியாக ஏராளமான தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்ததும், இந்தியா, இலங்கை, அரசியலில் ஊடுருவுவதற்கான வாய்ப்பாக அமைந்தன. தென்கிழக்காசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் கனவிலிருந்தது. (இருந்து கொண்டிருக்கிறது) இந்தியா, அந்த சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றுடன் பலமான உறவு கொண்டிருந்தது இலங்கை.

அப்போதைய இந்தியத் தலைமையச்சர் இந்திராகாந்தி, இருதட அரசியல் கொள்கை (TTwo Track Policy) ஒன்றை உருவாக்கினார். இலங்கை அரசுக்கும், அன்றைய முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாகிய தமிழர் இலக்கிய விடுதலை முன்னணிக்கும் (Tulf) மத்தியஸ்தம் செய்யும் ஒரு பாகத்தை வகிப்பது; இரண்டாவதாகத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்துப் பயிற்சி அளிப்பது (கலாநிதி ஆ. மனோகரன், இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும், பக். 395-396) போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்தது, தமிழீழ விடுதலைக்கு உதவும் நோக்கில் அன்று, இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியைத் தருவதற்கே. இது குறித்து இன்னும் விரிவாக விவாதிப்பதற்கு தமிழன்பன் ஓர் அரசில் புத்தகம் எழுதவில்லை.

இது ஒரு கவிதைத் தொகுப்பு.

ஆனால் இன்று சுட்டத்தகுந்த ஒரு பிரச்சினையின் வித்து, முளைவிடத் தொடங்கிய ஒரு காலம் அது. புலிகள் இயக்கத்தைப் ‘பயங்கரவாத இயக்கம்’ என்று வசைபாடும் காங்கிரசு, இந்தப் பயங்கரவாதத்துக்கு யார் கால்கோள் செய்தது என்கிற சுடுகிற உண்மையை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.

ஆயுதந் தாங்கிய போராளிகள் உருவானதற்கு இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறை மட்டுமன்று.

இந்தியாவின் வல்லாதிக்கக் கனவும் பங்களிப்புச் செய்தது என்பதை இனியும் மறைத்துப் பேச வேண்டியதில்லை.

ஆயுதங்கள்
எப்போதும் அன்பை உச்சரிப்பதில்லை
அவற்றின் மொழியில்
மரணங்கள் பெற்றெடுத்த சொற்களே அதிகம்.

இந்த வழிகளும், ஒருவகையில் அரசின் ஆயுதப் பயன்பாட்டின்மீது மட்டுமில்லாது, போராளிகளின், குறிப்பாகப் புலிகளின் மீதான விமர்சனமாகவும் கொள்ளத்தக்கவை. உண்மையைத் தேடும் நோக்கிலான இத்தகைய விமர்சனப் பொறிகள் கண்டு நாம் துணுக்குற வேண்டியதில்லை.

அண்மையில் பேராசிரியர்கள் சிலரோடு உரையாடும் போது, அவர்கள் புலிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள்.

பிற இயக்கத்தவர்களைத் தலைவர்களைக் கொன்றொழித்தார்கள் புலிகள் என்றனர். நான் அதை மறுக்கவில்லை. பிறகு அமைதியாக அவர்களைக் கேட்டேன்.

“பிற இயக்கத்தினரால் கொன்றொழிக்கப்பட்ட புலிகள் குறித்தும் நீங்கள் பேசுவீர்களா?’’
அவர்களிடம் பதிலில்லை.

புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் இப்படி ஆயுத மோதல்களில் கலந்தவர்கள்தாம்.

இந்த மோதல்களின் பின்னணியாக இந்திய உளவுத்துறையே செயல்பட்டது என்பது இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்கு முழுமையாகச் சொல்லப்படாத செய்தி.

துக்ளக், ஹிந்து போன்ற இதழ்கள் மூடி மறைத்த உண்மை.

ஈரோடு தமிழன்பனின் பார்வை, சிங்கள இனவாத ஆசை மட்டுமல்லாது, ‘இது இலங்க¬யின் உள்நாட்டுப் பிரச்சினை’ என்று பாவனை செய்த இந்திய அரசையும் அம்பலப்படுத்தத் தவறவில்லை

ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின் பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துகளால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கைபிசைந்து
தாயகத்தமிழன் கலங்குவதைப்
பூமி அறியும் வானம் அறியும்
புதுதில்லி அறியவில்லையே!

புதுதில்லி அறிந்தும் அறியாதது போலிருந்தது. அதற்கு ஆம் போட்டது தமிழக அரசு. நம் கண்முன் நடந்த ஓர் இனப் படுகொலையைத் தடுக்க முன்வராதது மட்டுமன்று - இந்த இனப்படுகொலைக்குத் துணை போன தவற்றையும் சரியாகச் சொன்னால் துரோகத்தையும் செய்தது இந்திய அரசு. அதற்குத் துணை போனது தமிழக அரசு.

உலக அளவில், இந்தப் படுகொலைகளைக் கண்டனம் செய்யாத ஒரு மௌனத்தை உருவாக்கியதிலும் இந்திய அரசின் கைங்கர்யத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எந்த ஒரு போராட்டக் கவிஞனைப் போலவும், தமிழன்பனும், தன் முன்னோடிக் கவிஞர்களையும் புரட்சியாளர்களையும் தான் ஆதரிக்கும் போராட்டத்துக்கு சாட்சியமாக்குகிறார்.

பாப்லோநெருதாவின் பாடல்கள்
ஆயுதக் கைகளால் அள்ளிக் கொள்கின்றன
பெருமூச்சோடும் பெருஞ்சினத்தோடும்
சேகுவேராவின்
சிவப்புக் கனத்த கண்கள்
திருப்புகின்றன ஈழத்தின்பக்கமாய்

இப்படித் தொடரும் தமிழன்பனின் நம்பிக்கைகள் நம் அனைவரின் நம்பிக்கைகள் சிதைந்து போயின என்பதுதான் இன்றைய வரலாறு.

இலங்கையின் கடந்த கால நிகழ்கால வரலாற்றிலிருந்தும், புனைவுகளிலிருந்தும் இனவெறி அரசியலை ஒரு வரலாற்று அமைதியோடு பார்த்துச் செல்லும் தமிழன்பன் ‘என் அருமை ஈழமே,’ நம் காலத்தின் கண்ணீருக்கும் கவிதைக்கும் ஓர் எழுத்துச் சாட்சியமாக இருக்கும். நம் மேன்மைகளுக்கு மட்டுமன்று நம் வீழ்ச்சிகளுக்கும் கூட. இதில் ஊடாடும் வரலாறு ஓர் ஒழுங்குபடப் பேசப்படவில்லை. அப்படிப் பேசப்பட்டிருந்தால் இது ஒரு வரலாற்றுப் பாடப்புத்தகமாக ஆகி இருக்கும். நிகழ்கால போராட்டத்தின் முன்னும் பின்னுமாக வரலாறு ஊடுபாவுவது, பல காட்சி விரிப்புகளை வழங்கிச் செல்கிறது.

‘இலங்கை
தனது முதல் பகலில் கண்டமுகம்
தமிழ்முகம்,
இலங்கை
தனது முதல் இரவில் கேட்ட பாடல்
தமிழ்ப்பாடல்’

என்று தொடங்கும் கவிதையே, கவித்துவத்தின் வெளிச்சத்தில் போராட்ட வரலாற்றை உணரும் மன உணர்வுக்கு வழி அமைத்துவிடுகிறது.

இந்த இனப் போராட்டத்தை ‘இரத்தினச்’ சுருக்கமாக இப்படிச் சொல்கிறார்.

எல்லாள மன்னன் மரணம்
திரும்பத் திரும்ப
நிகழ்கிறது - வேறு பெயர்களில்
அவர்கள்
புலிகளின் ஆதரவாளர்கள் அல்ல; ஆனால்
புலிகளைத் தவிர
வேறு ஆதரவும் அவர்களுக்கு இல்லை.

என்ற வரிகள் என்னுள் ஆழ்ந்த துயர அலை ஏற்படுத்துகின்றன.

இன்று புலிகளற்ற ஈழத்தமிழர் என்பதை எப்படி எதிர்கொள்வது?

பலர் வரலாம். தம்மை விரைந்து விற்றுக் கொள்வதுதான் அவர்களின் கடந்த காலமாக இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை புலிகளின் வீழ்ச்சியில் பழிதீர்த்துக் கொண்ட நிறைவை அடையலாம். ஈழப் பிரச்சினை ஒருவகையாகத் தீர்ந்தது என்று தமிழினத் தலைவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஆனால், தமிழீழ மண் தன் காயங்களையே கல்லறைகளாக எண்ணித் துளிர்ப்பதை மறக்குமோ?

அதன் மக்களின் நினைவுகளில் இந்தக் கொடுங்கனவு திரும்பி எழமுடியாத ஒரு பேரச்சத்தை விதைக்குமோ? தமிழன்பன் நம்பிக்கை ஊட்டுகிறார்.

இனவெறிப் போரின் முடிவில்
இவர்கள் எல்லோருமே அங்காந்த
சாவுப் பள்ளத்தாக்கின் வாயில்
கொட்டிக் குவிக்கப்படலாம்.
ஆயின்
தனது மண்ணிலிருந்தும் கல்லிலிருந்தும்
மலைகள் காடுகளிலிருந்தும்
ஈழத்தாய்
இரத்தமும் சதையும் எலும்பும் நரம்பும்
சாகாச் சுதந்தர மூசசும் கொண்டவர்களாய்
அவர்களை
மறுஉற்பத்தி செய்வாள்
இது சத்தியம்.
வாழ்க்கைக்கு வழிகாட்டி

ஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்



மண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. "நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அரசுகளின் பாதுகாப்புக்கு ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்" - சீன வெளியுறவுத் தொடர்பாளர் ஜியாங் யூ (22.4.2009).

இன்னொரு நாட்டின் மக்களைப் பற்றி கவலை கொள்ளாது, அவர்களை பல்வேறு சூழ்ச்சிகளால் அடக்கியாளும் ஆளும் வர்க்கக் குழுக்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்ற சீன நோக்கம் தெளிவாகிறது. இலங்கையில் ஆயுதப் புரட்சியை 1971-ல் மேற்கொண்ட அப்போதைய கம்யூனிஸ்ட் புரட்சிகர இளைஞர்களான ஜனதா விமுக்தி பெரமுனாவை அடக்க இந்தியா படை உதவி உள்ளிட்ட எல்லா உதவியும் வழங்கியது. ஜே.வி.பி.யினர் அப்போது சீன ஆதரவுக் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். ஆனால் அந்த இளைஞாகளின் எழுச்சியை அடக்க இலங்கை அரசுக்கு சீனா படை உதவி வழங்கியது.

புவியியல் அமைப்பில் சீனா, இலங்கையிலிருந்து மிகத்தொலைவில் உள்ளது. இந்தியா தன் வாலைச் சுழற்றி வாய்க்குள் விழுங்குவதற்கு ஏதுவாய் இருக்கிறது இலங்கை. இந்திய மலைப்பாம்புக்கு தேவைப்பட்ட தீனியாய் தன்னை தந்து கொண்டிருக்கிற போது, அதற்கு ஈடாய் தமிழினத்தை துடைத்தொழிப்பதற்கான அனுமதியை, உதவியை அடைந்து கொள்கிறது இலங்கை. அந்த வகையில் ஒரு சாமர்த்தியமான இனவெறி விரியன் குட்டி இலங்கை. தேர்தலுக்கு முந்திய ஒரு கவிதை கவிஞர் தமிழ்நதியின் கவிதை இவ்வாறு பேசுகிறது.
" ஒரு வழியாய் நண்ப்பர்களே,உங்கள் கவனத்தை சவப்பெட்டிகளிலிருந்து வாக்குப் பெட்டிகளுக்குக் கடத்தி விட்டார்கள்"

இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் லக்ஸ்மண்யப்பா 2008 இறுதியில் சொன்னார் "இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள சூழலில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை தேர்தல் முடிவடைந்தபின் தணிந்து விடும். இதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை".

தமிழக அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு செய்த முயற்சியின் பெருவிளைவாக, அவர் சொன்னது உண்மையாகி விட்டது. ஈழப்பிரச்சினை எனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு வந்த அனைவரும், தேர்தல் வெயில் அடிக்கத் தொடங்கியதில் போர்வையை வீசி எறிந்தார்கள். ஈழப்பிரச்சினை தொடர்பான ஆர்ப்பரிப்பை மௌனிக்கச் செய்தார்கள். அந்த மௌன கணங்களில், ராசபக்சே இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களுடன் போர்க்களத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார். 2009 சனவரி முதல் மார்ச்சு முடிய 8000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மன்றம் காட்டியது.

தமிழக அரசியல்வாதிகள் மௌனித்துவிட்ட அந்த நாட்க்களில், ஓராயிரம் ஆண்டு்டுகள் ஓய்ந்து்து கிடந்த்த பின்னர் வாராது போல் வந்த்த மாமணியைத் துடைத்தொழிக்க ராசபக்சே திட்டமிட்டு முன்னேறிக் கொண்டி்ருந்தான். இந்திய அரசு கருணாநிதியைப் பற்றி தெளிவாகக் கணித்திருந்தது. நவீன போர்க்கருவிகள், போர்ப் பயிற்சி, இராணுவ வல்லுநர்களைக் கொடுத்து இலங்கை அரசு வழியாக ஈழப் போராளிகளை அடக்கிவிடத் திட்டமிட்டது போல், தமிழக மக்களின் எழுச்சியைக் கருணாநிதி மூலம் திசை திருப்பிவிடலாம் என அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர்களின் வழிகாட்டுதல் படியே கருணாநிதியும் நாடகக் காட்சிகளின் ஒவ்வொரு படுதாவையும் இறக்கி விட்டுக் கொண்டிருந்தார். பதவியில் நீடிப்பதற்காக எதையும் பலியாக்கத் தயாராகும் இந்த முதிய கருணாநிதியை அவர்கள் அறிவார்கள்.
அப்படித்தான் ஆயிற்று நண்பர்களே! தேர்தல் முடிவு வெளிப்பட்டது. இந்தியாவில் தயார் நிலையிலிருந்த வாக்குப் பெட்டிகள் ஈழத்தமிழினத்தின் சவப்பெட்டிகளாய் உருவம் கொண்டன.
"ஒரு வழியாய் நண்பர்களே,
உங்கள் கவனத்தை
வாக்குப் பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகளுக்குக் கடத்தி விட்ட்டார்கள்"
தேர்தலுக்குப் பிந்திய கவிதை இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். மே 16-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. முல்லைத் தீவை பிண மண்டலமாக்கியிருந்த இலங்கை ராட்சசன், கடைசி விசையைத் தட்டிவிட்டான்.
ரேடார் கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், செயற்கைக்கோள் உதவிகள், 2004-ல் கொடுத்த கிளஸ்டர் கொத்துக் குண்டுகள், ரேடியல் பாம்ப்ஸ், வன்னிமக்கள் மீது இவைகளை வீச இராணுவ வல்லுநர்கள், களத்தில் நின்ற இந்தியச் சிப்பாய்கள் என இந்தியா இதுவரை வழங்கிய உதவிகளை விட, அதிக வீரியம் கொண்ட பேரழிவு ஆயுதமாக இருந்தது தேர்தல் முடிவு.

16-ந் தேதி தேர்தல் முடிவைத் தந்தது இந்தியர் நன்றியாக, பிணங்களை வழங்கினான் இலங்கை ராட்சசன்.
இந்தியா வாக்குப் பெட்டிகளை சவப் பெட்டிகளாய் மாற்றித்தர, அவன் அதைப் பிணங்களால் நிரப்பினான் கடைசி நாளில் 25 ஆயிரம் பேரைக் கொன்ற அடையாளம் தெரியாமல் செய்ய, இந்தியப் பெட்ரோல் ஊற்றி எரித்தான். மண்ணில் புதைத்தால் நாளை நிலைமை மாறுகிற கணங்களில் உலக மனித உரிமை நாய்கள், தோண்டி வெளியே எடுத்த வீசி விடுமென்று அவன் அறிவான்.

II

ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குள் நடத்தும் கொள்ளைக்கு பொருளாதார வளர்ச்சி, வணிக ஒப்பந்தம், திட்டமிடல் எனப் பல நாகரீகமான பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்களில் முதலில் கொள்ளைக்காரர்கள் நுழைவார்கள். பிறகு கொலைகாரர்களாய் மாறுவார்கள். கொள்ளைக்காரர், கொலைகாரர் என்ற இருபாத்திரங்ககளையும் தனித்தனியாய் அவர்கள் வகிப்பதில்லை.

ஈராக் மீது அமெரிக்கா கால்பதித்து மனிதக் கொலைகள் நடத்திய போது, பெட்ரோல் கொள்ளைக்காக நடத்தப்பட்ட கொலைகளே என்பதை அனைவரும் அறிவர். 2002ம் ஆண்டு நார்வே போன்ற நாடுகளின் முன்னெடுப்பால் உண்டான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, ராசபக்சே தன்னிச்சையாக முறித்துக் கொண்டான். நார்வே நாட்டையும் வெளியேறச் செய்தான். உடனடியாக, திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளில் இராணுவத் தாக்குதல் நடத்தி வெளியேற்றினான்.

புலிகள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வெளியேற்றப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்குத் திறந்த வெளி தயாராக்கப்பட்டது் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போதே, இப்பகுதியில் 672 சதுர கி.மீ. பரப்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுமென இலங்கை அரசு அறிவித்திருந்தது.

அங்குள்ள 14 கிராமங்களிலிருந்த தமிழர்களை வெளியேற்றி, அதைச் சுற்றி அதி உயர் பாதுகாப்பு வளையம் உருவாக்கிய பகுதியில் 2006ல் இந்திய எரிசக்தித் துறையும், சிலோன் மின்வாரியமும் இணைந்து அனல்மின் நிலையம் அமைக்க 350 மில்லியன் டாலர் திட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது் எந்தக் கொள்ளையையும் அனுமதிப்பேன் தமிழினத்தை நான் அழிக்க்க உதவி செய்த்தால் போதும் என்ப்பது இனவாத அரசின் நிபந்த்தனை.

பொருளாதார வேட்டைக்குப் பொருத்தமாய் மனித அடக்கு முறைகள் வருகின்றன. ஏற்கெனவே இந்தியா-இலங்கை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. "சார்க் நாடுகள்" என்ற பெயரில் அந்த அமைப்புக்கு அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாய் தலைமைப் பீடமாய் செயல்படும் இந்தியா இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்குள் தடையற்று நுழைய முடிந்தது் இந்தியாவின் தனியார் மூலதன நிறுவனங்கள் என 50-க்கு மேற்பட்டவை இலங்கையில் உள்ளன. துணி ஆலைகள்(Textiles), பெட்ரோல் நிறுவனங்கள். வாகன உற்பத்தி போன்றவைகளில் 50 விழுக்காடு இந்திய முதலாளிகள் கையில். 1991ல் 740 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் 2000த்தில் 125பில்லியன்(Billion) இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 தொழில் திட்டங்களாகப் பெருக்கெடுத்தன.

உருக்கு, ரப்பர், சிமெண்ட், கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி, மருத்துவம், பொறியாளர் பயிற்சி போன்ற தொழில்களில் இந்தியாவின் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் காலடி பதித்துள்ளன என்பது மட்டுமல்ல. இலங்கைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தலையாரிகளாக ஆகியுள்ளன. இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தனக்குத் தேவைப்பட்ட தருணங்களில் தேவையான அளவு தீர்மானிப்பதாகவும் இந்தியத் தலையாரி ஆகியுள்ளான்.

இனவாதத்தால் உள்நாட்டு மக்களை ஏமாற்றியும், நாட்டின் இன்னொரு இனமக்களை ஒடுக்கியும் செயல்படுகிற ஒருவன் புத்தனைக் கொன்றவன். இன்னொருவன் காந்தியைக் கொன்று புதைத்து பேரெடுத்தவன். தத்தம் நாட்டினது, ஆதிக்கக் குழுக்களின் நலன்களுக்காக செயல்படும் இருவரும் இருபெரும் ஆக்கிரமிப்பாளர்களே. இன ஒடுக்கு முறையை உலகநாடுகளின் ஒத்துழைப்போடு நடத்திக் கொண்டிருந்த போதும், இந்தியாவை நிரந்தரமான துணையாக ஆக்கிக் கொண்டது இலங்கையின் பலம். இது பற்றி தெளிவாகத் தெரிந்த பின்னும், இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்று போராளித் தலைமைகள் பேச வேண்டிய நிலையிலிருந்தது தான் தமிழினத்தின் பலவீனம்.

2007ல் புலிகளின் வான்படை, இலங்கை கட்டுநாயக இராணுவ விமானங்களைத் தாக்கியழித்த போது, "இந்திய பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து் இந்திய வான எல்லையையும், கடலோர எல்லையையும் பாதுகாக்க, கூடுதல் பலத்துடன் எச்சரிக்கையைhக இருப்போம்" என இந்தியத் தளபதிகள் அறிவித்தார்கள்.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் "இலங்கை இராணுவத்துக்கும் எங்களுக்கு மிடையிலான யுத்தம் இது. புலிகளின் வான் படை இந்தியப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இருக்காது" என உறுதிமொழி தந்தார்.

கடைசியாய் மரண எல்லையிலிருக்கிற வேளையிலும், "நாங்கள் இந்தியாவின் நண்பர்கள், இந்தியாவை ஒரு போதும் எதிரி நாடாய் கருதவில்லை" என்று தான், அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் தெரிவித்துக் கொண்டிருந்தார்.

"இலங்கையை ஒரே தீவாய் வைத்துச் சுரண்ட, அடக்கி எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது எமது விருப்பம். இரு நாடுகளாக்கி அழகு பார்த்தால், இந்தியாவிலுள்ள தமிழினம் தனியாகப் போய், இந்தியாவின் கட்டமைப்பு உடைந்து போய் விடும்" என்பது மட்டும் இந்தியாவின் மறைத்து வைக்கப்பட்ட, இன்னும் வெளிப்படுத்தப்படாத உள்நோக்கமாகும்.

ஒற்றைத் தீவாய், ஒற்றைச் சுரண்டலாய், தனக்கு உள்ளடக்கமாய் இலங்கையை வைத்திருக்க வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கக் கோட்பாடுகளே, ஈழத்துக்கு எதிர் வினைகளாய் உருவாகின.

III

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட ஐ.நா. உரிமைக் குழுவின் சிறப்புக் கூட்டம் தேவையற்றது" .

ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் மே 26ல் இந்தியப் பேராளர் கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். (கோபிநாதன் ஒரு மலையாளி. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கரமேனன், தேசிய பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணன், ஐ.நா.வின் தூதர் விஜய் நம்பியார் இவர்களனைவரும் மலையாளிகள் என்பது குறிப்பிடப்பட வேண்டியது)
"ஒரு பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்டு வந்த துன்பமான, நீண்டகால மோதலுக்கு இப்போது தான் இலங்கை முடிவு கண்டிருக்கிறது. நல்லிணக்கதை ஏற்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், துன்பமான இந்த மோதலின் விளைவுகளை வெற்றி கொள்ளுதல் என்ற நடைமுறைகளுக்கு ஊக்கம் அளிப்பதில் கவனம் செலுத்துவதே உலக சமுதாயத்தின் குறிக்கோளாகவும் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும். மாறாக சில நாடுகள் இந்தச் சிறப்புக் கூட்டத்தைத் திணித்திருப்பதன் மூலம் மனித உரிமை மன்றத்தின் பணிகளையே அரசியல் ஆக்கிவிட்டன. இது வருந்தத்தக்க நிகழ்வு" என்று கோபிநாதன் ஐ.நா.மன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஐ.நா.வில் தமிழினப் படுகொலையை ஆதரித்து, இலங்கைக்கு ஆதரவாக இந்தியா கொடி தூக்கியது இது முதல் முறையல்ல் இந்த கோபிநாதன் அச்சங்குளங்கரேயின் இடத்தில் 1983இல், சையத் மசூத் என்பவர் இருந்தார். 1983இல் இலங்கையில் 5000 தமிழர்கள் கொன்று வீசப்பட்ட இனப்படுகொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் உறுப்பினர்களாகியிருந்த பலரும் கண்டித்துப் பேசினார்கள். "

ஆனால் இந்தியக் குரல் மட்டும், இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என வித்தியாசமாய் ஒலித்தது"

(Syed Masud from India supported the suggestion that the subcommittee should not hastily act in with regard to the situation on the Sri Lanka Island)
- The Hindu 23.8.1983

அதுபோலவே, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் ஐ.நா.வில் வாய் திறக்கவில்லை. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, எல்லாப் பிரச்சினை பற்றியும் பேசினார். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி மட்டும் பேசவில்லை. இது வருந்தத்தக்கது".

எம்.ஜி.ஆர். முதலமைச்ச ராயிருந்த போது, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் வருத்தப்பட்டது மட்டுமல்ல் 1983ல் இவ்வாறு இனப்படுகொலையின் போது பாதிக்கப்பட்ட கொழும்புத் தமிழர்கள், அகதிகளாய் மன்னாருக்கும், யாழ்ப்பாணத்துக்கும் ஏற்றிச் செல்ல இந்தியா கப்பலை அனுப்பியது் அதைக் குறிப்பிட்டு எஸ்.டி.எஸ். "பயணிகள் கப்பலை அனுப்பிப் பயனில்லை. படைக் கப்பலை அனுப்ப வேண்டும்" என்றார்.

இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவைத் தாண்டி ஐ.நா. மன்றத்துக்குச் செல்வதென எதிர்க்கட்சித் தலைவராயிருந்த கலைஞர் கருணாநிதி முடிவெடுத்து, ஒரு கோடிக் கையெழுத்துகளைத் திரட்டினார். 29.8.1983 அன்று சென்னைக் கடற்கரைச் சீரணி அரங்கில் ஒரு கோடிக் கையெழுத்துப் படிவங்களை பார்வைக்கு வைத்து உரை நிகழ்த்தினார்.

"இப்படிப்பட்ட கோரக்காட்சி களையெல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? இந்தியா வேறு, தமிழ்நாடு வேறு என்றில்லாமல், இந்தியா தான் தமிழ்நாடு - தமிழ்நாடு தான் இந்தியா என்று நாங்கள் கருதிக் கொண்டிருக்க நீங்கள் தமிழர்களுக்குச் செய்தது என்ன?"

"உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்?

உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் நின்றுவிடுவது ஏன்?" கோபம் கொப்பளிக்கக் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி.

அப்போது இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கும் காங்கிரசுக்கும் - ஓரு வேண்டுகோள் வைத்தார். "நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். நாளைக்கு ஜெயவர்த்தனேயை மிரட்டுகிற அளவுக்கல்ல் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுகிற அளவுக்கு இந்தியப் படை இலங்கைத் தீவிலே நுழைந்து, அங்கே தமிழர்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கித் தருமேயானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இன்னும் பத்தாண்டு காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இங்கே ஆட்சிக்கு வர முயற்சி எடுக்காது. நீங்களே வேண்டுமானால் தமிழகத்தையும் சேர்த்து ஆளுங்கள். உங்கள் காங்கிரஸ் கட்சியே ஆளட்டும்.

நாங்கள் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலே ஈடுபடவில்லை. தமிழன் வாழ வேண்டும், தமிழ் இனம் வாழ வேண்டும். செத்துக் கொண்டிருக்கும் தமிழனை வாழ வைக்க வேண்டும்".

1984ம் ஆண்டு டெலோ மாநாட்டில் கருணாநிதியின் சொற்பொழிவு, "இப்போதே சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்த முடிவை உடனே செயல்படுத்த வேண்டும்" என்பதாய் அமைந்திருந்தது.

"இங்கே இருக்கின்ற எல்லாக் கட்சியினருக்கும், கட்சி சார்பற்ற முறையில் உடலில் ஓடுகின்ற ரத்தம் தமிழ் இரத்தமானால், இதயத்தில் துடிக்கும் துடிப்பு ஒவ்வொன்றும் தமிழ், தமிழ் என்று துடிப்பது உண்மையானால், அந்தத் தமிழன் சிந்திக்கட்டும். இனி பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில இறங்க வேண்டும்". "என்ன செயலில், எப்படிப்பட்ட செயலில்? ஆளுக்கு ஓர் ஆயுதத்தை தூக்குவதா என்று கேட்பீர்கள். அப்படி ஒரு காலம் வந்தால் தட்டிக் கழிக்க முடியாது."

"இந்தத் தலைமுறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையில் அது வரலாம். ஏனென்றால் தமிழினத்தை அழித்துத்தான் தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நம்மை ஆளுகின்ற அரசு இங்கே இருப்பதும், அதைப் பார்த்தும் பார்க்காதது போல நாம் பாமரர்களாய், பஞ்சைகளாய், பரிதாபத்திற்குரியவர்களாய் உலவுவதும் நியாயமில்லை".

"எனவே தான் சொல்லுகிறேன். இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் மறுநாள் உலகத்திலே இருக்கின்ற தமிழனுக்கு ஒரு நாடு கிடைத்தாக வேண்டும். அப்படிக் கிடைக்கின்ற நாடு எளிதாய்க் கிடைக்கக் கூடிய ஒன்றாக, அதற்குத் தயாராகி விட்ட நிலையிலே உள்ளதாக இருப்பது தனித்தமிழ் ஈழநாடாகும். அந்தத் தனித் தமிழ் ஈழநாட்டைப் பெறுவதற்காக நம்மாலான அனைத்துத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்".

கருணாநிதியின் நியாயமான இந்தப் பேச்சு் அவரின் அன்றைய உரை முதல்வரான இன்றைய கருணாநிதிக்கு உடன்பாடற்றதாய், எதிர்நிலையாய் ஆனது தான் அவலம். வீரதீரனாக நடிக்கும் கதாநாயகனின் வெற்றுத் திரைப்பட வசனம் போல் ஆகிவிட்டது. இன்று அவர் சொல்வதென்ன?

"இந்தப் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடே எனது நிலைப்பாடு... ஈழம் கிடைத்தால் எதிர்க்கப் போவதில்லை. மகிழ்ச்சியடைவேன்." கலைஞர் கருணாநிதியின் கடந்தகாலங்கள் அவரின் நிகழ்காலத்தை கேள்விக்குட்படுத்துகின்றன. அந்தந்த காலத்திற்கு அவர் பேசும் வீரவசனங்களை அந்தந்த காலத்திற்குரிய தனித்தனி கல்லறைகளில் புதைத்து விடுகிறார். பழையவற்றைப் புதைத்த கல்லறைகளின் அருகே புதிய கல்லறைகளை உண்டாக்கி வருவதற்கு, அதிகார நிலையோடு ஒன்றாய்க் கலந்து விட்ட அவரது வாழ்வியலே காரணம்.

"தமிழீழ மக்களின் எதிர்காலத்துக்காக போர்க்களத்தில் தன் மகனையே சாகக் கொடுத்தான் ஈழத்துப் போராளி் மகன்களின் அமைச்சர் பதவிக்காக டெல்லிக்கு அலைந்து கொண்டிருந்தார் இங்குள்ள கருணாநிதி"

என்ற புதிய ஒப்புமைச் சொல்லாடலை அவரது வாழ்வியல் தான் உருவாக்கியது. எழுச்சிகரமாகத் தொடங்கி வார்த்தை ஜாலமாக முடிந்து போன அவரது வாழ்க்கைதான் அடிப்படை. கருணாநிதியைப் போல், தமிழினத்தை நம்பச் செய்தவரும் இல்லை. அவரைப் போல் தமிழனத்தை மோசம் செய்தவரும் இல்லை.

அக்.14இல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் கலைஞர். "15 நாட்களுக்குள் போர் நிறுத்தம் செய்ய இந்தியா முயற்சி செய்யவில்லை என்றால் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்" என்ற தீர்மானம் - அனைத்துக் கட்சிகளின் முடிவாக வந்தது. டெல்லிக்கு அனுப்பப்பட்டது. இந்திய அரசுக்கு நெருக்கடியைத் தருமென போர் முடிவுக்கு வருமென அனைத்துத் தரப்பும் எதிர்பார்த்திருந்தது.

ஏனென்றால்
இந்தப் போரை இந்தியா தான் நடத்துகிறது என்பது கலைஞருக்குப் புலனாகியிருந்தது போலவே எல்லோருக்கும் வெளிச்சமாகியிருந்தது.

ஒரு வாரத்தில் இலங்கையிலிருந்து, ராசபக்சேயின் தம்பி பசில் ராசபக்சே அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து விட்டு, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கான சூழலே இல்லையென விளக்கிவிட்டுப் போனார் போரைத் தொடருங்கள் என்று அவருக்குச் சொன்ன பிரணாப் முகர்ஜி கலைஞரிடம் வந்து பேசினார். என்ன பேசினார்கள் என்று தெரியாத மூடு மந்திரமானது. "அனைத்துக் கட்சிகள் கூடி எடுத்த முடிவு இது.

எனவே மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நீங்கள் சொன்னதை பரிசீலிக்கிறோம்" என கலைஞர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சிகளை மதிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச ஜனநாயகப் பார்வை கூட இல்லாமல், பிரணாப்முகர்ஜியின் பேச்சு எனக்குத் திருப்தியளிக்கிறது என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் நாடகம் போலவே பல நாடகங்களைத் தொடர்ந்து, அரங்கேற்றிக் கொண்டிருந்தவர் - திடீர் உண்ணா நோன்பு நாடகத்தையும் நடத்திக் காட்டினார். வங்கக் கடலின் இந்த முனையில் அவர் உண்ணா நோன்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, கடலின் இன்னொரு முனையில் ஈழத்து உறவுகள் சொல்லொணாத் துயரத்து்க்குள்ளும் மரணத்துக் குள்ளும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அக்டோபர் 14 துரோகத்தின் பின் ஐம்பதாயிரம் தமிழ் உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன. மே 16ல் முள்ளிவாய்க்கால் நெடுக 25 அயிரம் பிணங்கள் ஒரே நாளில் விழுந்தன. கடைசியாய் ஒரு லட்சம் பேரைக் காவு எடுத்து தீவிர வாதத்தை ஒடுக்கியாயிற்று என்று ராசபக்சே குலுக்கிய கரங்களுக்குள் சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் கரங்கள் மட்டுமல்ல் கருணாநிதியின் கரங்களும் இருந்தன.

"உங்கள் யுத்தத்தை நாங்கள் நடத்தினோம்" என்ற ராசபக்சேவின் எக்காளம், இந்தியாவுக்குச் செலுத்திய காணிக்கை மட்டுமல்ல் கருணாநிதிக்குச் செலுத்திய காணிக்கையும் தான்.
ஈழப்போர் இந்தியாவின் துரோகத்தினால் வீழ்ந்தது் அந்த துரோகத்தின் வேர் தமிழகத்தில் இருந்தது.





வீழா வீரங்கள்...!


அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'.. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டுது போல". பதிலுக்கு அப்பா "ஓமோம் ஓமோம் சத்ததைப் பார்க்க அப்படித்தான் தெரியுது, பலாலி கோவமா இருக்குது இழப்புகள் போல" என்ற அதற்கு அங்கிள் இருக்கும் விடிய பேப்பரில பார்க்கத்தான் தெரியும்" என்று பதில் தந்தார். என்ன சாதாரணமாய் இருக்கினம். என் மனம் கேள்வி கேட்டுவிட்டு, நினைவுகளால் விரிகின்றது.

அவனை சந்தித்து நண்பனாக்கியது அதிஸ்டமோ துரதிஸ்டமோ நான் அறியேன். வீட்டுக்கு அருகில்தான் அவனும் வாழ்ந்தான். இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை. கனகாலம் முகம் அறிந்திருந்தும் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அன்று ஒருநாள் திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்காய் வாழைமரம் கேட்டு வீட்டுக்கு வந்தான். "வாழைமரம் வேணும் தருவிங்களா" "ஏன் தம்பி எதுக்கு " சம்பிரதாயமாய் பதில் கேள்வி எழுகிறது அம்மாவிடம் இருந்து. "திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு 'ஆன்ரி' ". "அதுதான் பொடியங்கள் வாழைமரம் கட்ட வேணாம் என்றிட்டினம் எல்லோ பிறகேன் கட்டுறீங்கள்..". "ஓம் 'ஆன்ரி' ,இது நான் எங்கள் வீட்டில படம் வைக்க" பதிலுக்கு அவன். "சரி தம்பி வெட்டிப் போங்கோ" என்ற அம்மா "அந்த வாழைகளைக் காட்டி விடப்பு" ...என்றா என்னிடம். கத்தியோடு வாழை காட்ட அவனைத் தொடர்கிறேன். அப்போ.. "உங்களைக் கண்டிருக்கிறன் எங்க இருக்கிறனீங்கள்" தெரிஞ்சும் கேட்கிறேன்.. "செல்வாண்ணா கடைக்கு அருகில" என்றான் அவன். எங்க படிக்கிறீங்கள் "கொக்குவில் இந்துவில"..பதிலுக்கு அவன் "நீங்கள்"... நான் "பற்றிக்ஸ்".

அன்றிருந்து சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் கதைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவனே கேட்டான். "நீங்கள் தமிழுக்கு ரியுசன் போறனீங்களோ".. இல்லை நான் தமிழுக்குப் போறதில்லை.. " என்றேன். கந்தசாமி மாஸ்ரட்ட போக விருப்பமா" என்றான் அவன் பதிலுக்கு. "அம்மாட்டக் கேட்டிட்டு சொல்கிறேன்" என்றேன். அதைத் தொடர்ந்து.. அம்மாவிடம் கேட்க அவாவும் சம்மதிக்க நாங்கள் இருவருமே அவரிடம் படிக்க இணைந்தோம். அவருடைய வகுப்புகள் விடிய 6 மணிக்கு ஆரம்பிக்கும்.அவன் விடிய 5:00 க்கே வீட்டு கேற்றில் தட்டிக்கொண்டு நிற்பான். எனது 'சைக்கிளில்' அக்கறையோடு தோழமையோடு இருவரும் வகுப்புப் போவோம். கட்டுரைகள் வீட்டுவேலைகள் கலந்தாலோசித்து செய்வோம். அப்படியே நாங்களும் நல்ல நண்பர்களானோம்.

திடீர் என்று ஒருநாள் நான் கந்தரட்ட வரேல்ல என்றான்.."ஏன் என்ன பிரச்சனை.." . என்றேன். "பிரச்சனை ஒன்றுமில்ல"...என்று இழுத்தான். சொல்லுங்கோ நாங்கள் இயன்றது செய்யுறம் என்ற.."நான் வேற ரியுசனுக்கும் போறனான்.. எல்லாத்துக்கும் காசு பிரச்சனை அதுதான்" என்றான். பாவம்.. அது உண்மைதான். அவன் வீட்டில் அம்மா தான் எல்லாம்..வருமானம் குறைவுதான். அவன் அப்பா வேறு திருமணம் செய்து போய்விட்டார். நான் சொன்னேன் "சரி நாங்கள் கந்தரோட கதைப்பம்...அவர் கஸ்டம் என்றா இலவசமாப் படிக்க விடுவாராம்". கதைச்சுப் பார்ப்பமே என்றேன். ஓம் என்றான். நாங்களும் கதைக்க அவரும் ஓம் என்ற அவன் வகுப்பைத் தொடர்ந்தான். பிரச்சனைகள் ஏதுமின்றி எங்கள் கல்வியும் நட்பும் தொடர்ந்தது.

வழமை போல் அன்றும் வகுப்பிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. வரமாட்டான் என்று சொல்லவும் இல்லை. காத்திருந்துவிட்டு நான் வகுப்புக்கு சென்றுவிட்டோன். அடுத்த நாளும் அவன் வரவில்லை. வீட்டில் போய் விசாரிக்க அவன் உறவுக்காரர் வீட்டுக்கு கிளிநொச்சி போனதாகச் சொன்னார்கள். ஏக்கம் ததும்ப எப்ப வருவார் என்று கேட்டேன். "அவர் அங்க இருந்துதான் படிக்கப் போறார்" என்றார்கள்...அது கேட்டது முதல் மனசு கனத்தது. நண்பனென்று அவனுடத்தான் அதிகம் பழகியது, இருந்தும் இடையில் இப்படிச் செய்திட்டானே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... கோவமும் கவலையும் சேர ஏமாற்றத்துடன் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மணலாறில் மின்னல் இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது ஒரு மாதத்துக்கும் மேலாய் பெரிய சண்டை. காயமடைந்த போராளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். பாடசாலையில் இருந்து போராளிகளைப் பரமாரிக்க நண்பர்கள் போனார்கள். நானும் ஒரு நாள் கூடிப் போனேன். அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போ "இங்க ஆக்கள் அதிகம் நிக்கிறீங்கள் மற்ற வோட்டுக்குப் போங்கோ" என்று ஒரு போராளி அண்ணா சொன்னார். நானும் எங்களில் சிலரும் அங்கு போனதும் கண்டகாட்சி மனதை உலுக்கியது. முதற் கட்டிலில் அவன்.... நண்பனாகி.. சொல்லிக் கொள்ளாமலே..என்னைப் பிரிந்தவன் கால் ஒன்றை இழந்து காயத்தோடு அனுங்கியபடி.... ஓடிச்சென்று பரிவோடு பார்வைகளால் பேசினேன். அவன் கண்கள் கலங்கின. ஏக்கங்கள் ததும்ப என் கைகளைப் பிடித்தான். கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவனையும் மற்றவர்களையும் பராமரிக்கும் பொறுப்பை கேட்டு வாங்கி சில தினங்கள் செய்தேன்.

சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி அவனும் வீட்டுக்கு வந்து பேசினான். நான் மீண்டும் போகப் போறன். "அம்மா பாவமில்லையா" என்றேன்.." அப்படிப் பாத்திருந்தா நான் போயிருப்பேனா.. என் கடமையை நான் முழுக்க முடிக்க வேணும்" என்றான் அவன். அவனிடம் உறுதி தெரிந்தது.. வேட்கை இருந்தது. பாசறையில் வளர்ந்தவன் எல்லா..திடமாய் இருந்தான். உன் இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவதை விட வேறெதுவும் பேச சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். அவனுடைய உறுதி என்னை வியக்க வைத்தது. அன்று ஒரு நாள் கோபத்தில்.. அவனுடன் வைத்த நட்புக்கான முற்றுப்புள்ளியை அந்தக் கணமே அகற்றிக் கொண்டேன். ஒரு இலட்சிய வீரனை நண்பனாக்கியதில் எனக்குள் இறுமாப்பு பற்றிக் கொண்டது.

அதன் பின் எங்கு சண்டை என்றாலும் அவன் எண்ணங்களே என்னை ஆட்கொள்ளும். இன்றும் சண்டை என்றதும் அவன் எண்ணக்களே எண்ணில் வந்து மோதின. பொழுது விடிய விடிய சண்டையின் உக்கிரம் தனிந்தது. பயம் நீங்கி கொஞ்சம் படுப்பம் என்று தூங்கிய நான் எழும்ப 10 மணிக்கு மேல ஆகிட்டுது. முகத்தைக் கழுவிட்டு சைக்கிளை ஒரு மிதி மிதிச்சு பேப்பரோட வந்து நின்றேன். செய்தி பெரிசா இல்லை. "மண்டைதீவு இராணுவ முகாம் மீது தாக்குதல்" தலைப்புச் செய்தியோடு விபரம் பெரிசா இருக்கவில்லை. விபரங்கள் கிடைக்கல்லப் போல ஸ்பெசல் பேப்பர் வரும் என்று காத்திருந்தன். வீட்டில் எல்லோருக்குள்ளும் செய்தியறிய ஏக்கம் கலந்த ஆவல். அன்றைய பொழுது அசாதாரணமாகவே கழிந்து கொண்டிருந்தது.

பிற்பகல் போல ஸ்பெசல் பேப்பர் வந்தது. விபரங்கள் தேடத்தேட ஏக்கங்கள் அதிகரித்தது, போராளிகளுக்கு என்ன இழப்பு. விபரம் காணேல்ல என்று எண்ணியபடி பக்கங்களைப் புரட்டினேன். ஓர் இடத்தில் வீரச்சாவு பட்டியலில் சிறிதாக இருந்தது. சில பெயர்கள் மட்டுமே இருந்தன. அப்பாடா பெரிய இழப்பு இல்லை. என் நண்பன் அவன் பெயரும் இருக்கவில்லை. ஏதோ சொல்லி மனம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்கும் போது சோக கீதம் இசைக்கும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மனதுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை உணர்ந்தேன். பல கேள்விகள் முளைக்கலாயின.. அவன் மட்டுமா எனக்கு நண்பன்.. பழகினால் தானா நட்பு.. சொந்த மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட இவன் நண்பன் இல்லையா.. ஏன் நான் இப்படி சுயநலத்தோடு ..??! விடை காணத்துடித்தேன்..அன்றிலிருந்
து எல்லாப் போராளிகளயும் என் நண்பர்களா எண்ணிக் கொண்டேன். நண்பன் ஒருவன் வித்தாகி விழுந்துவிட்டால் கண்ணீர் சிந்தித்தான் செய்தியே படிப்பேன். வித்தாகிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று மரியாதை செய்வேன். "எதிர்பார்ப்புகள் இல்லா உன்னதங்கள் மாவீரர்கள்" என்ற வசனத்தை எனக்குள் பொறித்துக் கொண்டேன்..! அவர்களை உதாரணமாக்கி வாழப்பழகிக் கொண்டேன். உண்மையில் என் நண்பனே இத்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டவன். இப்போ அவனே புரட்சியாளன் எனக்குள். பிறிதொரு சண்டையில் அவன் வீரச்சாவடைத்த போது அவனுக்காக அழவில்லை.. இறுமாந்து கொண்டேன். எனக்குள் புரட்சியாளனாக அவனே வாழ்கிறான். அவன் வீழ்ந்தாலும் அவன் விட்டுச் சென்ற நினைவுகள் வீழாது வாடாது.