Photobucket

20 August, 2009

பான் கீ மூனின் இலங்கை விஜயம் தோல்வி கண்டுள்ளது: நோர்வேயின் ஐ.நா. தூதுவர் தெரிவிப்பு


ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் மேற்கொண்ட இலங்கை விஜயத்தின் போது ஐ. நா. அதிபர் என்ற வகையில் அவர் தோல்வியை தழுவியுள்ளார் என்று நோர்வேயின் ஐ.நா.தூதுவர் மோனா ஜுல் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. அதிபரின் தலைமைத்துவ போக்கை நோர்வே தூதுவர் கண்டித்துள்ளார் என்று ஒஸ்லோ தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

பான் கீ மூனுடன் பணியாற்ற முடியாதளவிற்கு அவர் அடிக்கடி ஆத்திரமடைகிறார் என்றும் தலைமைத்துவத்தைப் பேண முடியாமல் தத்தளிக்கிறார் என்றும் பொறுப்பற்றவராக காணப்படுகிறார் என்றும் ஐ.நா. வுக்கான நோர்வே தூதுவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்தரங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒஸ்லோ தினசரி ஆவ்தென்போஸ்டன் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. ஸ்தாபனமும் உலக நெருக்கடிகளுக்கு தீர்வும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அவசியப்படும் இந்தக் காாலகட்டத்தில் பான் கீ மூனும் ஐ.நா. ஸ்தாபனமும் ஆச்சரியகரமான முறையில் மெளனம் சாதிப்பதாக ஜுலின் அறிக்கை கூறுகிறது.

ஆகஸ்ட் மாத முடிவில் ஐ.நா. அதிபர் நோர்வே செல்லவுள்ளதால் தூதுவரின் இந்த அறிக்கை ஒஸ்லோவுக்கு ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தலாமென கருதப்படுகிறது.

பான் கீ மூன் அண்மையில் மேற்கொண்ட இலங்கை, மியன்மார் விஜயங்களின் போது அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து நோர்வே இராஜதந்திரி கண்டனம் தெரிவித்தார். ஐ.நா. அதிபர் என்ற வகையில் அவர் இந்த விஜயங்களின் போது தோல்வியையே தழுவியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார் ஸ்ரோர் தூதுவர் ஜுலின் அறிக்கை குறித்தோ அவரின் செயற்பாடு குறித்தோ தாம் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் ஒரு இராஜதந்திரியின் பங்கு, போக்குகள் பற்றி அறிவிப்பதே ஆகும் என்று அவர் கூறினார்.

அனைத்துமே செயலாளர் நாயகத்தில் தங்கியிருப்பதில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ஸ்ரோர், ஐ.நா. ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் தனிப்பட்ட நாடுகள் செய்யத் தயாராக இருக்கும் செயற்பாடுகளின் மொத்த உருவமே ஐ.நா. ஸ்தாபனமாகும் என்று கூறினார்.

No comments:

Post a Comment