Photobucket

21 August, 2009

முல்லைத்தீவு, இரணைமடுவில் விமான படையினரின் புதிய ஒடுபாதை!



முல்லைத்தீவு மற்றும் இரணைமடுவில் புதிய விமானப்படை தளங்கள் அமைக்கப்பட்டு ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன என விமானப்படை பேச்சாளர் ஜானக நாணயக்கார தெரிவித்துள்ளார். ஏற்கனவே புலிகளால் பாவிக்கப்பட்டுவந்த இலகுரக விமானங்களை தரையிறக்குவதற்கு பாவிக்கப்பட்ட ஒடுபாதைகளே அவை என்றும், மேற்படி விமான ஒடுபாதைகள் புனரமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டதும் அதனை விமானப்படையினர் பாவிப்பர்.

விமான ஒடுபாதைகளுக்கான அபிவிருத்தி பணிகளை விமானப்படை தளபதி ஏயார் மார்சல் றோசான் குணதிலக நேற்றுக்காலை பார்வையிட்டுள்ளார். விமான ஒடுபாதைகளின் அபிவிருத்தி பணிகள் இவ்வாண்டு முடிவடைவதற்குள் நிறைவு செய்யப்பட்டு ஒடுபாதை விமானப்படையினரின் முற்று முழுதான பாவனைக்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment