Photobucket

07 September, 2009

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவுவீர்களா?

தமிழகத்தில் மாட்டிக் கொண்டுள்ள நார்வே ஈழத்தமிழருக்கு உதவுவீர்களா?

மனிதம் - மனித உரிமை அமைப்பு, தமிழகத்தில் அகதியாக வந்து, மாட்டிக் கொண்டுள்ள நார்வே தமிழருக்கு உதவி செய்ய தயாராய் உள்ளது. அவரது நண்பர்கள், கூடுதல் தகவல் அளித்தால், இத்தமிழரை உடனடியாய் காப்பாற்றி, நாடு திரும்ப உதவலாம்.

மாட்டிக்கொண்டுள்ள நார்வே தமிழர் பலச் சந்திரன் பற்றிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நார்வே தமிழர்கள் உதவுவார்களா?

Contact to :
Manitham - Human Rights Org.
mail : manitham@gmail.com
mobile : +91-9003027712 or 9443322543 or 9003133661
Fax : +91-28133968

----
வெளிநாட்டு பணத்துடன் வந்த அகதியிடம் விசாரணை

ராமேஸ்வரம்:வெளிநாட்டு பணத்துடன் தனியாக வந்த இலங்கையைச் சேர்ந்த இன்ஜினியரான அகதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவபாலச்சந்திரன்(48). இலங்கையில் தொடர்ந்த சண்டையால், நார்வே சென்ற இவர், ஆஸ்லே நகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து, அங்கேயே பணியாற்றி நார்வே குடியுரிமை பெற்றுள்ளார்.

இவர், இலங்கையில் சண்டை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வவுனியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க, இரண்டு மாதத்திற்கு முன் இலங்கை வந்துள்ளார்.வவுனியா முகாமில் சகோதரனையும், அவரது மனைவியையும் சந்தித்தபின் இருவரையும் இந்தியாவிற்கு அழைத்துவர முயற்சித்துள்ளார். இலங்கை ராணுவத்தால் சிவபாலசந்திரனுக்கும் பிரச்னை ஏற்பட்டதால், வவுனியாவிலிருந்து மன்னார் வந்து அங்கிருந்து படகில் அகதியாக ராமேஸ்வரம் வந்தார்.

தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷன் வந்த அவரிடம் போலீசார் சோதனை செய்ததில், நார்வே நாணயமான குரோனி 4,700, இங்கிலாந்து பவுண்டு 25, அமெரிக்க டாலர் 2,550, இலங்கை பணம் ஒன்றரை லட்சம் மற்றும் ஒரு மொபைல்போன் இருந்தது.

அகதி சிவபாலசந்திரன் கூறும்போது, "வவுனியா முகாமில் உள்ள சகோதரனையும், அவரது மனைவியையும் முகாமில் இருந்து வெளியே அழைத்து வர அங்குள்ள ஏஜன்ட் ஒருவரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு, என்னையும் இலங்கை ராணுவத்திடம் பிடித்து கொடுத்துவிடுவதாக மிரட்டினார்.

"வேறு வழியின்றி, வவுனியாவிலிருந்து ராணுவத்திற்கு தெரியாமல் மன்னார் வந்து இங்கு அகதியாக வந்தேன். படகு கட்டணமாக ஒன்றேகால் லட்சம் ரூபாய் இலங்கை படகோட்டியிடம் கொடுத்தேன்' என்றார். அவரை போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
--------------
Lankan refugee claims he is a Norwegian citizen

Madurai: A refugee who arrived in Rameswaram on Sunday, told media representatives that he was a Norwegian citizen and that he had fled to India fearing arrest by the Sri Lankan government.

Sivabalachandran (43), son of Rasaiah of Jaffna, said he went to Norway as a small boy and completed his Engineering there and later got in touch with the LTTE. He came to Sri Lanka a few weeks ago and when he came to know that the government was trying to arrest him, he went into hiding and escaped to India.

No comments:

Post a Comment