Photobucket

07 September, 2009

சனெல் 4 இன் வாயை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம

தயவு செய்து இந்த மடலை சிரத்தையுடன் படியுங்கள்

இல்லையேல் யாவும் கை நழுவி போக கூடும். பிரித்தானிய ஸ்ரீ லங்கன் பேரவை என்னும் சிங்கள இனவாதிகளை மட்டும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பு சானல் 4 இற்கு எதிராக குரல் கொடுக்க சகல சிங்கள மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பேஸ் புக் போன்ற பிரபல தளங்கள் ஊடாக என்றும் இல்லாதவாறு பெருமளவில் இந்த பிரசாரம் முன்னெடுக்க படுகிறது.

இப்படியான எதிர்ப்புகளை தவிர்க்க பல ஊடகங்களை ஸ்ரீ லங்கா பற்றி பாராமுகம் காட்டும் நிலைமைக்கு தள்ள படலாம்.

இன்று விடுதலை புலிகள் விட்டு சென்ற பெரும் அரசியல் இடைவெளியை நிரப்ப முடயாமல் தவிக்கும் பொழுது உலக தலைவர்களினதும் ஊடகங்களினதும் தமிழர் வாழ்வுரிமைக்கான குரல் மிக முக்கியமானதாகும்.

இந்த வழியில் சானல் 4 இன் முயற்சி இன்று ஐ நா சபை , அமெரிக்கா வரை கேட்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. அண்மையில் காட்டப்பட்ட காணொளி உலக அரங்கில் ஸ்ரீ லங்காவை அழுத்ததிற்கு உள்ளகியுள்ளதனால் சானல் 4 மீது சேறு பூச சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா எடுத்து வருகிறது.

ஏற்கனவே பிரித்தானிய தலைவர்களிடம் தனது சானல் 4 மீதான அதிருப்தியை வெளிகாடியுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அடுத்த கட்ட நகர்வாக ,

விடுதலை புலிகளின் வீழ்ச்சியுடன் அமைதியாகி விட்ட பிரித்தானிய தமிழர்களின் குறைபாட்டை தமது பலமாக்கி கோதபாய ராஜபக்சே இன் வழிபடுத்தலில் பெரும் பண உதவியோடு BSLF அமைப்பு வரும் சனிகிழமை 05 செப்ட் 2009 அன்று எதிர்ப்பியக்கம் ஒன்றை நடாத்தவுள்ளது.

இந்த நிலையில் சானல் 4 இன் வீர செயலுக்கு மதிபளிக்கும் தமிழர்களும் இலஙகையரும் இணைந்து உங்களிடம் வேண்டுவது ஊடக சுதந்திரத்துக்கான உங்கள் குரல் மட்டுமே. இந்த பொது பிரச்சனையிலாவது உங்கள் ஒன்று பட்ட ஆதரவை எதிர்பார்கிறோம்.

தமிழ் சுதந்திர போரில் நடந்த உண்மை கதைகளை வெளிக்கொண்டு வந்த சானல் 4 இற்கு என்றும் எமது நன்றியை சொல்லுவோம்!

இலங்கையின் வடக்கே இரும்பு திரைக்கு பின்னால் நடந்த படுகொலைகளை வெளி உலக்குக்கு காட்டிய சானல் 4 இற்கு என்றும் எங்கள் ஆதரவை உரத்து சொல்லுவோம் !

news@channel4.com என்ற மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதுடன் BSLF போன்ற ஸ்ரீ லங்கா அரசின் பணத்தில் முகவர்களாக செயற்படும் அமைப்பின் முயற்சிகளை கணக்கில் எடுக்காது ஊடக அடிமைப்பட்ட மக்களுக்கான குரலாக என்றும் ஒலிக்க சானல் 4 ஐ வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.


No comments:

Post a Comment