Photobucket

01 September, 2009

சிறிலங்காவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ச்சியாக இரு மாதங்கள் வீழ்ச்சி


சிறிலங்காவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதித்துறை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதுடன் 3 லட்சம் மக்களை நாசி பாணி வதை முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் சிறிலங்காவின் ஆயத்த ஆடைகளை கொள்முதல் செய்யாதீர்கள் என மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ச்சியான பரப்புரை நடத்திவரும் நிலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களின்படி நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதித் துறையான ஆயத்த ஆடைகள் துறையின் வருமானம் கடந்த ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5.6 விழுக்காட்டினால் குறைந்துள்ளது.

மே மாத விற்பனை நிலைவரம் இதனைவிட மோசமானதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற விற்பனையைவிட இந்த ஆண்டு 22.23 விழுக்காடு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஜூன் மாதத்தில் ஏற்பட்ட விற்பனை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் ஆடைகள் வாங்குவது குறைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 21.6 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 2008 ஆம் ஆண்டு மே, ஜூன் மாத காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 10.8 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது.

2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 2009 ஆம் ஆண்டு தொடக்கம் காலாண்டு காலப்பகுதியில் 8.8 விழுக்காடு உயர்ந்திருந்தது. ஆனால் அரையாண்டு முடிவில் மொத்த ஏற்றுமதி 2.4 விழுக்காட்டினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு இளவேனில் காலத்துக்கு என வழங்கப்பட்ட கொள்முதல் கட்டளைகளுக்கான துணிமணிகளை சிறிய நிறுவனங்கள் ஒக்ரோபரில் ஏற்றுமதி செய்ய தொடங்கியதும் இந்த வீழ்ச்சி சரிசெய்யப்பட்டு விடும் என ஆடை ஏற்றுமதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தேவைகள் குறைந்திருப்பதும் விலை போட்டியுமே ஆடை ஏற்றுமதி வீழ்ச்சிக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment