Photobucket

10 September, 2009

வன்னி முகாமில் இருந்து தப்பி வந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கொழும்பில் கைது


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிச் சண்டை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி வரை நின்று இவர் சண்டையிட்டவர் என்றும், பின்னர் காயமடைந்ததால் மக்களுடன் மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்த சமயம் படையினருக்கு கையூட்டு கொடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து வந்தார் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு, கல்கிசைப் பகுதியில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment