தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்
தரணிபுகழ வாழ்ந்துகாட்ட அதுவே முதல்நாள்
அரசியல் கோமாளிகள் ஆளும் தமிழ்நாட்டில்
அமைதியின்மை தன்வேரை ஆழச்செலுத்துறதே!
உழைப்போர் நிலை ஒவ்வொரு நாளும் தாழ்மையுற
ஊதாரிகள் படம் தாங்கி ஊர்முனை சிரிக்கிறதே!
கேரளா ஆந்திரா கர்நாடகா அவரவர் ஆட்சி செய்ய
கேடுகெட்டத் தமிழன் அவர்களாள கேட்டுவாங்கித் தின்கிறானே!
தன்இனத்தை தாழவைத்து தலையாட்டி கோடிசேர்த்து
தறுதலை பட்டம்பெற்று சிரித்து தம்பட்டம் அடிக்கிறானே!
தன்மானம் காக்க தன்எதிர்ப்பைக் காட்டும் தரணிவாழ் உயிர்களைப் பார்!
தன்மானம்இழந்து தன்னினத்தைஅழிக்க தர்க்கம்செய்யும் தமிழனைப் பார்!
கைஏந்தி வாழும்இவன் காலம்காட்டும் சங்கத் தமிழ் வாரிசா?þஅல்லது
கயவாளிக்குணம் பெற்றஇவன் காட்டுமிராண்டித் தலைமயிரா?
பேருக்குத்தான் தமிழனென்றால் பேரிடி இவன்தலை விழட்டும்
பிறப்பவர்கள் இனிமேலாவது பிறர்புகழ மானம் பெறட்டும்
நாய்களைப்போல் நரிகளைப்போல் நடித்துவாழ வேண்டாம்þபிறர்
நயவஞ்சகத்தில் நலம்பெற்று அவரை நக்கி வாழவேண்டாம்!
பிறர் கையில் தமிழகமோ விழிபிதுங்கி வெம்புது
பிறப்புரிமை பிறர் சுரண்ட பேச்சுத்திணறிக் கிடக்குது
உணர்வுபெற்று உனை உணர்ந்து ஓங்கி எழுடா தமிழா!-þபிற
ஊதாரிகள் ஓட ஓட உனது ஆட்சி படைடா தமிழா!
04 September, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment