கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு போராட்டம் நடத்தி சிறை சென்ற தொண்டர்களுக்கு பாராட்டு விழா, பொதுக்கூட்டம் வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மைதானத்தில் நடக்க இருந்தது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பெரியார் தி.க. மாநகர செயலாளர் கோபால் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் போலீசார் எல்.டி.டி.இ. இயக்கத்திற்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் எனக்கூறி அனுமதி மறுத்து விட்டனர்.
இதையடுத்து வருகிற 31-ந்தேதி அன்று நடைபெற இருந்த கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment