Photobucket

03 September, 2009

ஈழப்போரில் காயப்பட்ட பெண்மணி தமிழகத்தில் குழந்தை பெற்றார்

கிளிநொச்சியில் பிறந்த மேரிவேலன்டினா சிவரூபனை காதலித்து கைப்பிடித்தார். திருமணம் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடபெற்றது.

கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிய... ஓடி ஒளிந்தார்கள். 2 வயது குழந்தை ஹம்சாலினியின் உடலை பதம் பார்த்தன சிங்களர்கள் வீசிய அரக்க குண்டுகள். செத்து மடிந்த ஹம்சாலினியை மடியில் போட்டுக் கொண்டு கதறி அழுதார் குண்டு காயம் அடைந்த வேலன்டினா.

வயிற்றில் இன்னொரு உயிரை சுமந்தபடி உயிர்தப்பிய வேலன்டினா ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தையைத்தான் பறிகொடுத்து விட்டோம், வயிற்றில் வளரும் குழந்தையையாவது நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

உயிர் மட்டுமே மிச்சமாகி இருந்த நிலையில் அடுத்த விமானத்தில் கணவருடன் சென்னைக்கு பறந்து வந்தார். அரும்பாக்கத்தில் இருவரும் தங்கினார்கள். வேலன்டினாவுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குண்டு வீச்சில் பலியான வேலன்டினாவின் முதல் குழந்தைக்கு கடந்த மாதம் 22-ந்தேதி பிறந்தநாள். அதற்கு முந்தைய நாள் வேலன்டினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இறந்துபோன ஹம்சாலினியே மீண்டும் வந்து பிறந்திருப்பதாக பூரிப்படைந்தார்கள் காதல் தம்பதிகள்.

தற்போது சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ள இருவரும் சிகிச்சை முடிந்து மீண்டும் இலங்கைக்கே செல்வோம் என்று கூறினர்.

இலங்கையில் தமிழர்கள் படும்பாடு பற்றி சிவரூபனிடம் கேட்டோம். விரக்தியின் விளிம்புக்கே சென்றவர், எதுவும் வேண்டாம் சார் என்றார். அவரையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.

No comments:

Post a Comment