Photobucket

06 September, 2009

வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் இருந்து இவர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

நான் சொல்லுவதை மறுத்து வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் வழங்கு தொடர்ந்தாலும், அதை சந்திக்க நான் தயார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பணத்தை எப்படி பெற்றார்கள். யார் மூலம் பெற்றார்கள். இதற்கு கனடாவில் உள்ள ஒரு நபர் உதவியிருக்கிறார். அதற்கான சாட்சியும் என்னிடம் இருக்கிறது. தேவை வரும்போது அதை வெளியிடுவேன் என்றார்.

மேலும் அவர் பேசியதாவது,

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீது 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடருவேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்ததற்கு தங்கள் குழுவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினோம்.

தானியங்கி பணபட்டுவாடா எந்திரத்தில் (ஏடிஎம்) வாடிக்கையாளர்களுக்கு ரசீது கிடைப்பது போல, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு ரசீது கிடைக்க செய்யும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

அடுத்து வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் அடுத்த முதல்வராக இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் வர வேண்டும். கிறிஸ்தவர் முதல்வராக வரக்கூடாது. ஏனென்றால் அம்மாநிலத்தில் இந்துக் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்து மதத்தை காப்பாற்றவும், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சனைகளை முன்னிறுத்தவும், பிஜேபியுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், 2011 சட்டசபை தேர்தல் வரை இந்த பிரச்சாரம் நடைபெறும் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார்.

பெல்ஜியம் நாடு சோனியாவுக்கு ஒரு விருதை வழங்கியிருக்கிறது. இது வெறும் அலங்காரத்துக்கானது என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு பதவி என்றால், சோனியாவின் எம்.பி. பதவியை தகுதி இழக்க செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment