சனிக்கிழமை மாலை முதல் தூத்துக்குடி நகரம் முழுதும் களை கட்டி விட்டன...காமராஜர் கல்லூரியில் இருந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பால விநாயகர் தெருவில் உள்ள இடத்தில் பொதுக் கூட்டம் நடைப் பெற்றது...
இந்த பேரணியின் அணைத்து புகைப்படங்களையும் பார்வையிட இங்கு சொடுக்கவும் நன்றி
பேரணி சுமார் நான்கு மணியளவில் தொடங்கி யானை முன்செல்ல ...அதில் கம்பீரமாக அமர்ந்து புலிக் கொடி ஏந்தி ...தாரை தப்பட்டை முழங்க ...இரு சக்கர ஊர்வலம் தொடர்ந்து வர... மேதகு தேசிய தலைவர் வே.பிரபாகரன் புகைப்படம் அணிந்த மேல்சட்டையும் பதாகைகளும் கொண்டு வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர்....ஊர்வலம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஊர்ந்து சென்றது...( சமீப காலங்களில் ஊர்வலம் இது போன்று நடைப் பெற்றது ...தலைக்கு இருநூறு ரூபாய் மற்றும் கோழிப் பிரியாணி, வாகன செலவு மற்றும் மறக்காமல் தண்ணீர் பாக்கெட் உள்பட ...என்றாலும் ஒரு ஒழுங்குக்கு ஒத்துவராத பேரணிகள் அவை ... ) பேரணி சுமார் தூத்துக்குடி நகரின் முக்கியத்துவமான நிகழ்ச்சியாக அமைந்தது...
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியின் முன்னோட்டமாக தேனிசை செல்லப்பாவின் செவி இசை அனைவரும் கண்டு களிக்கும் நல்ல இசை நிகழ்ச்சியாக அமைந்தது...இந்த தூத்துக்குடி" நாம் தமிழர்" நிகழ்ச்சி முழுதும் நாம் தமிழர் அமைப்பின் வளர்ச்சிக்கான சிறந்த ஒரு முன் உதாரணமாக அமைந்தது என்று சொல்லலாம்....மதுரை நிகழ்ச்சிக்குப் பின் இந்த தூத்துக்குடி நிகழ்ச்சி மிகவும் கவனமாக திட்டமிட்டு நடந்த நிகழ்ச்சி என்று பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்...
பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு இவையெல்லாம் தமிழ் நாட்டிலுள்ள தேசிய அல்லது தேசிய கட்சியாக மாறப் போவதாக கூறிக்கொள்ளும் கட்சிகளுக்கும்....அரிதாரம பூசி சமீபத்தில் தேசிய கட்சி ஒருவாக்கிய போலி தமிழ் தலைவனுக்கும்...இனிமேல் தேசிய கட்சியில் வர இருக்கும் தனது சினிமா அரசியலில் ( எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபனா....அது என்ன சினமா அரசியல்...தெரியாதவர்களுக்கு ...! .ஒரு சிறு விளக்கம் ...! நடிகர் விஜயகுமார் மஞ்சுளா அரசியல் அது )..
கலக்க மூட்டுபவையாக அமைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல...!
காசு கொடுத்து யாரும் வரவில்லை....என்றாலும் மிகப் பெரும் கூட்டம் ...யெல்லாம் இளைஞர்கள் ...அவர்களின் கண்களில் தெரிந்தது யெல்லாம் தமிழ் விடுதலை ...தமிழ் உணர்வு ....தமிழ் வேட்கை ...நீண்ட நாட்கள் ஆயிற்று ...இந்த புதிய தலைமுறை பார்த்து.... முன்பு இப்படித்தான் நடந்தது....அதை அறுவடை செய்தது ...இன்று உள்ள MNC கருணா... இனிமேல் யாரும் அறுவடை செய்ய முடியாது .....அப்படியே பொருத்திப் பார்ப்பதுதான் நடக்கப் போகின்றன....
No comments:
Post a Comment