Photobucket

10 September, 2009

தமிழ் மக்களின் இன்றைய பணி: விடுதலைப்புலிகள் ஜனநாயகத் தலைமை ஏற்பதை உலகம் அங்கீகரிக்க செய்ய வேண்டும்.

உலகில் ஆயுத வழி தமது இன மக்களின் உரிமைக்காகப் போராடி பேரினவாத, மொழிவாத, தேசிய வாத அல்லது வல்லாதிக்க அரச பயங்கரவாதங்களினால் கொடும் இராணுவ இயந்திரம் கொண்டு அடக்கப்பட்ட போராட்டங்கள் பல.

சிறீலங்காவிலேயே தமது சொந்த சிங்கள ஆட்சியாளர்களின் முதலாளித்துவ வகுப்புவாத சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து சிங்களவர்கள் இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சி செய்திருக்கின்றனர்.

ஜே வி பி (ஜனத்தா விமுக்தி பெரமுன - Janatha Vimukthi Peramuna) இந்த ஆயுதக் கிளர்ச்சிகளை 1971 மற்றும் 1987-89 காலப் பகுதிகளில் செய்தது. அதில் 1971 கிளர்ச்சி இந்திய இராணுவ உதவியுடன் 15,000 சிங்கள இளைஞர்களை பலியிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் ஜே வி பி கிளர்ச்சியை அடக்க என்று சுமார் 7000 க்கும் அதிகமான சிங்கள இளைஞர்களை கொன்று குவித்தன சிங்கள அரசும் அதன் ஆயுதப்படைகளும்.

முதலாவது கிளர்ச்சியை அடக்கியவர் இன்றைய மகிந்த ராஜபக்ச கட்சியின் அப்போதைய தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. பின்னைய கிளர்ச்சியை அடக்கியவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணசிங்க பிரேமதாச.

1989 இல் ஜேவிபியின் தலைமை சிங்கள அரச படைகளால் அழிக்கப்பட்டதோடு அதன் கதை முடிந்தது என்றே கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஜேவிபி உயிர்ப்புப் பெற்றது. ஆனால் அதன் பயணப் பாதை இனவாத அரசியல் சார்ந்த ஜனநாயகப் பாதை என்று சொல்லிக் கொள்ளும் வகைக்கு இருப்பது என்னவோ தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு துரதிஸ்டம் தான்.

இருந்தாலும் ஜே வி பியின் வரலாறு.. ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னான வீழ்ச்சியும் சமீப பத்தாண்டுகளில் அவர்கள் கண்டுள்ள ஜனநாயக எழுச்சியும் தமிழ் மக்களின் அரசியல் ஏக பிரதிநிதிகளாக அரசியல் - இராணுவ பரிமானத்தோடு வளர்ந்திருந்து இன்று ஒட்டுமொத்த உலகால் இராணுவ பலத்தை இழக்கச் செய்யப்பட்டு நிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நல்ல மீள்வுக்கான உதாரணம் என்று கொள்வதில் தப்பில்லை.

அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இனவாத அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல கோரிக்கை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போல் திடமாக உறுதியோடு போராடியவர்களும் யாரும் இலர். அவர்களைப் போல பேச்சு மேடைகளில் எந்த விட்டுக் கொடுப்புக்கும் இடமின்றி தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தோரும் யாரும் இலர். அந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் ஜனநாயகத் தலைமையை ஏற்க முன்வருவதோடு அதனை ஜனநாயகத்தை உச்சரிக்கும் இந்த உலகம் ஏற்கவும் செய்ய வேண்டும்.

இந்திய தேசிய வாதத்தினால் ஆயுதக் கிளர்ச்சிகள் திட்டமிட்டு தெற்காசியப் பிராந்தியத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் ரகசியமான விடயம் அல்ல. இந்திய தேசியம் என்பது தமிழீழத்தின் உருவாக்கத்திற்கு உதவக் கூடிய ஒரு காரணி அன்று. அதன் வீழ்ச்சியே சோவியத் வீழ்ச்சியோடு பல சுதந்திர தேசங்கள் பிறந்தது போல தமிழீழமும் பிறப்பெடுக்க உதவும். அதுவரை தமிழர்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சாணக்கிய அரசியலை செய்ய வேண்டிய நிலை ஒன்று இருக்கிறது.

சிங்கள பேரினவாத அரசிற்கு.. இந்திய தேசியத்திற்கு வால்பிடிக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் எதனையும் அரசியல் ரீதியாக பெறவும் முடியாது சாதிக்கவும் முடியாது.

இந்தியாவில் பஞ்சாப்பில் சீக்கியர்களின் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் காஷ்மீரில் தனிநாட்டுக்கான முஸ்லீம்களின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சியாக இருக்கட்டும் தென்னாபிரிக்காவில் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் போராட்டம் பெரிய வெற்றிகளை சாதிக்காத தன்மையாக இருக்கட்டும்.. பலஸ்தீனத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கம் சிதறிடிக்கப்பட்டு பலமிழக்கச் செய்யப்பட்டதாக இருக்கட்டும் இவற்றின் பின்னாலான அந்தந்த போராளிகளின் நடவடிக்கைகள் என்பது வெறும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி விடுவதாக இருக்கவில்லை.

வீழ்ச்சிகளில் இருந்து துரித கதியில் மீண்டு அவர்கள் இன்று ஜனநாய வழியில் தமது மக்களை வழிநடத்திக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கிறது.

ஆனால் சிறீலங்காவில் அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதில் சிங்கள ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருப்பதுடன் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்குத் திரும்புவதைக் கூட சிங்கள அரசுகள், கட்சிகள் மற்றும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் விரும்பவில்லை.

ஜே வி பியின் வீழ்ச்சியோடு அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்த சிங்கள அரசுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுடன் வாழ்ந்த மக்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க முன் வரவில்லை. மாறாக தமிழ் மக்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அண்மையில் இன, மொழி ரீதியான பெயர்களுடன் கூடிய கட்சிகளின் இருப்பையும் உதயத்தையும் சட்டவிரோதமாக்கி இலங்கைத் தீவில் இருக்கும் சிறுபான்மை மக்களின் பல்லின அடையாளங்களையும் ஜனநாயக உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக நசுக்கிவிட முயன்று வருகின்றது.

தற்போது அந்தச் சட்டம் சட்டவிரோதமானது என்று சிங்கள சிறீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலும்.. சிங்கள அரசின் உண்மையான செயலுரூபத்தை அதன் இந்த ஒரு ஜனநாயக பண்பழிப்புச் செயற்பாடே உறுதிப்படுத்தப் போதுமானதாக உள்ளது.

இந்த நிலையில்.. தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ வீழ்ச்சி என்பது ஏற்படுத்தி இருக்கும் ஒரு சூனியத்துள் இருந்து அல்லது அரசியல் வெற்றிடத்தில் இருந்து அவர்களை மீட்டு வர வேண்டும்.. மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் முன் உதயமாவதே அதற்கு சிறப்பான வழி ஆகும். அதுவே சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சவாலாக அமைவதோடு தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகள் ஜனநாயக வழியில் வெல்லப்படக் கூடிய சாத்தியமான வழிமுறைகளை கையாண்டு முயற்சிகளை இதய சுத்தியோட மேற்கொள்ள உதவியாகவும் அமையும்.

சந்தர்ப்பவாத, காட்டிக்கொடுப்பு, ஆயுத அரசியல் செய்யும் சிங்கள அரசோடு ஒட்டிப் பிழைக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களிடம் எந்த தெளிவான தமிழ் மக்களிற்கு என்றான அரசியல் அபிலாசையும் கிடையாது.தமிழ் மக்களிற்காக பேரம் பேசக் கூடிய திறனும் அவர்களிடம் இல்லை.

அதுமட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கூட ஒரு உருப்படியான செயற்பாடின்றிய ஒரு வகை உறைநிலையில் இருக்கும் கட்சியாகவே தோற்றமளிக்கிறது. அக்கட்சியின் உறைநிலை சிதறும் போது அதன் அங்கத்தவர்களின் உண்மை முகமும் தெரிய வரும். அது நிச்சயம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெல்ல உதவாது. அந்த உறுப்பினர்களின் சொந்த அரசியல்.. எதிர்காலத்தை நிச்சயிக்கும் விதமாகவே அது பெரும்பாலும் அமையும்.

எனவே தமிழ் மக்களுக்கு இன்று வேண்டியது.. திறந்த வெளிச் சிறைகளில் அடைபட்டிருக்கும் 3 இலட்சம் மக்களின் விடுதலை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த ஈழத்தமிழ் மக்களுற்கும் ஒரு வலுவான ஜனநாயக அரசியற் தலைமை. அதை விடுதலைப்புலிகள் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் களத்தில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக உலகின் முன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக வழியில் செயற்பட இலங்கைத் தீவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவ ஒரு கோரிக்கயை முன் வைத்து அதனை நடைமுறைச் சாத்தியமாக்க உதவக் கோர வேண்டும்.

ஜனநாயகத்தை பாதுகாக்க என்று ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போர் செய்பவர்கள்.. சிறீலங்காவின் ஜனநாயக அழிப்பே நடந்து கொண்டிருக்கும் போது அதை ஊக்குவிப்பதுமின்றி கண்டும் காணாதது போலவும் இருக்கின்றனர். இவர்களின் இரட்டை வேடங்களையும் தமிழ் மக்கள் தோலுரித்துக் காட்டி அவர்களின், இந்த உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பி தமிழ் மக்களின் உண்மையான அரசியல் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை மீண்டும் மீண்டும் இந்த உலகிற்கு நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

அப்போதுதான் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது திட்டமிட்டு இந்திய தேசியத்தின் அழுத்ததால் உலகெங்கும் குத்தப்பட்ட பயங்கரவாத முத்திரையை அழிக்க முடியும். அதன் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகளை ஜனநாயக அரசியலுக்குள் செயலிறக்கி தமிழ் மக்கள் தமது நீதியான நேர்மையான விருப்புக்குரிய ஜனநாயக அரசியல் உரிமையை தன்னாட்சி உரிமையை வெற்றி கொள்ள முயற்சிக்க முடியும்.

அதைவிடுத்து எல்லாம் முடிந்து போய்விட்டது.. எனி என்ன இருக்கிறது.. என்று ஒட்டுக்குழுக்களின், காலம் காலமாக தமிழ் மக்களை கொன்ற பயங்கரவாத தடைச்சட்டம், சிறீலங்காவின் அவசரகாலச் சட்டத்திற்கு வாக்களித்தே வயிறு வளர்த்த நரைத்த தாடிகளைக் கொண்ட காட்டிக் கொடுப்பாளர்களை தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக சித்தரிக்க முயல்வது தமிழ் மக்கள் தம்மை தாமே மீள முடியாத படுகுழியில் தள்ளி அரசியல் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

களத்திலும் புகலிடத்திலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களே இவை குறித்து சிந்தியுங்கள். விரைந்து ஒற்றுமையோடு, மாவீரர்களும், மாண்டு போன மக்களும் மற்றும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களின் உள்ளங்களுள் ஒழிந்திருக்கும் உணர்வுகளும் சொன்ன, சொல்லும் பாதையில் நடக்க ஒரே இலட்சியத்தோடு செயற்படுங்கள். இதுவே எமது இனத்தின் அரசியல் விடிவுக்கான இன்றைய முதற் தேவையும் கூட.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வன்னி முகாமில் இருந்து தப்பி வந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் கொழும்பில் கைது


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்பில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதிச் சண்டை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கடைசி வரை நின்று இவர் சண்டையிட்டவர் என்றும், பின்னர் காயமடைந்ததால் மக்களுடன் மக்களாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தார் என்றும் பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.

வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்த சமயம் படையினருக்கு கையூட்டு கொடுத்து அங்கிருந்து அவர் தப்பித்து வந்தார் எனவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு, கல்கிசைப் பகுதியில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பெயர் விவரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராகுல்காந்தியை எதிர்த்தும் சுவரொட்டிகள்! பொலிஸார் நள்ளிரவில் அகற்றம்



விருதுநகர், நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மள்ளர் மீட்புக்களம் அமைப்பினர் ராகுல் காந்திக்கு எதிராகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

அதை அப்பகுதி பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். இதனிடையே நேற்று இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

08 September, 2009

ஈழத் தமிழர்கள்-காங். எம்.பிக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம்.

டோரன்டோ: தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா? இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும், இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனுக்கு கனடா படைப்பாளிகள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கனடா படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கை..

" கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எனவே தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசு க்கு இல்லை. தமிழின விரோதப் போக்கை மத்திய அரசு பின்பற்றுகிறது என்பது தேவையற்ற வாதம்" என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளது நல்ல பகிடி.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பாதுகாப்பு அமைச்சர் எல்லோரும் சிறிலங்காவிற்கு ஹெலிகாப்டர்கள், ராடார்கள், உளவு, புலனாய்வு, வட்டியில்லா நிதி கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவற்றை வைத்துத்தான் சிங்கள பவுத்த வெறிபிடித்த மகிந்த ராசபக்சே கும்பல் 25,000 பொது மக்களைக் கொன்றொழித்தது.

அண்மையில் சானல் 4 ஒளிபரப்புச் செய்த காணொளியை நீங்கள் பார்க்கவில்லையா? கண் துணியினால் கட்டப்பட்டு கைகள் பின்னால் பிணைக்கப்பட்டு தரையில் வைத்து முதுகுப் புறமாக பலப் தமிழ் இளைஞர்கள் சிங்கள ராணுவ வெறியர்களால் பத்தடி தொலைவில் இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை அந்தக் காணொளி காட்டியது.

சிறிலங்கா சிங்கள -பவுத்த இனவெறி ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய இனப் படுகொலைக்குப் பொறுப்பாக இருந்த இனத் துரோகிகளையும் பேரினப் படுகொலைக்காரர்களையும் வரலாறு பதிவு செய்யும்.

ஷேக்ஸ்பியர் கூறுவது போன்று ஏழேழு கடல் அளவு நீர் கொண்டு கழுவினாலும் இவர்களின் கைகளில் படிந்த குருதிக் கறையைப் போக்க முடியாது.

இந்த ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனிதவுரிமை அவையில் சிறிலங்கா மீது போர்க்குற்றம் சாட்டி மேற்குலக நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்துப் பேசியதும் அல்லாமல் எதிர்த்து வாக்களிக்கவும் செய்தது.

திருகோணமாவட்டத்தில் உள்ள சம்பூரை சிங்கள ராணுவம் 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் மூலம் சம்பூர் உட்பட முதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூதூர் கிழக்கில் 20,000 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 23 ஊர்களைச் சேர்ந்த 17,000 மக்கள் இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் மே 30, 2007 ஆம் ஆண்டு ராசபச்சேயினால் வெளியிடப்பட்ட அதி சிறப்பு அரச அரசாணை மூலம், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புப் கொண்ட மூதூர் (கிழக்கு) மற்றும் சம்பூர் பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதில் ஜூன் 16, 2007 அன்று மூதூர் கிழக்கையும் சம்பூரையும் அதிவுயர் பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசு அரசாணை மூலம் அறிவித்தது. அதே அரசாணையின் மூலம் முதலீட்டு சட்ட அவைச் சட்டததின் கீழ் 675 ச.கிமீ (260 ச.மைல்அல்லது 500 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு சிறப்பு பொருளாதார வலயமும் உருவாக்கப்பட்டது.

அரசினால் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த பூர்வீகப் பகுதிகளினுள் அமைக்கப்பட்டிருந்த 300 வீடுகள் மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு தரை மட்டமாக்கப்பட்டுள்ளதுடன், 500 ஏக்கர் கொண்ட இந்த நிலப்பகுதியில் இந்தியாவின் 100 மெகாவாட் மின் உற்பத்தி அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதற்கான அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்திய அரசு சம்பூரில் 500 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு அனல்மின் உலையை கட்ட ஸ்ரீலங்கா அரசோடு உடன்பாடு செய்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அரச நிறுவனமான தேசிய அனல் மின் கழகமும், (National Thermal Power Corporation (NTPC) ஸ்ரீலங்கா அரசு சார்பாக இலங்கை மின்சார கழகமும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 5-50 விழுக்காட்டில் இரண்டு நாடும் முதலீடு செய்யும். அமெரிக்க டாலர் 500 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த அனல்மின் உலை 2012 இல் முடிவு பெறும்.

சம்பூர் நகரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் கடலடி கம்பிவடங்களை அமைக்கும் திட்டம் என்பன தொடர்பிலான ஒப்பந்தங்கள் அடுத்த கிழமை இந்தியா - சிறிலங்கா இடையே கையெழுத்திடப்படவுள்ளது.

இதன் மூலம் இடம்பெயர்ந்த 2000 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்லாது தடுக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக வாழ்ந்த வாழ்விடங்கள் அநீதியான முறையில் பறிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நிலத்தை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு ஆய்வு செய்யுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அந்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

மூதூர் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு சிங்கள – பவுத்த பேரினவாதியான ராஜபக்சே செவிசாய்க்க மாட்டார் என்பது தெரிந்ததே.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தில் மூதூர் கிழக்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படாதது மட்டுமல்ல அவர்களது நிலம் அனல் மின்உலை கட்டுவதற்கு இந்தியாவுக்கு ஸ்ரீலங்கா தாரைவார்த்துக் கொடுத்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த மின் உலைத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழ்மக்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை பணவருவாய் தான் தனது குறிக்கோள் என்று இந்தியா சொல்கிறது. எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்ற மாதிரி ஏழைகளின் கண்ணீரில் இந்தியா பணம் ஈட்டப் பார்க்கிறது.

தமிழ்மக்களுக்கு எதிராக இந்தியா செய்யும் இந்த இரண்டகம் "தமிழின விரோதப் போக்கு" இல்லையா? இதைவிடப் பச்சை இரண்டகம் வேறு இருக்கமுடியுமா?

இதுதொடர்பாக மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது ...

கடந்த 2006 ஆம் அண்டு ஏப்ரில் மாதம் இடம்பெற்ற போர்ச் சூழ்நிலையால் மூதூர் கிழக்குப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வரும் நாம் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் எமது மீள்குடியேற்றத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேசமயம், கடற்கரைச்சேனை சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கணிசமான நிலப்பரப்பினை இந்தியாவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கிராமங்களைச் சேர்ந்த எம்மை பள்ளிக்குடியிருப்பு இறால்குழி ஆகிய பிரதேசங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அறிகின்றோம்.

முற்றுமுழுதாக விவசாயமும் கால்டை வளர்ப்புமே எமது தொழில்களாகும். நாம் வாழ்ந்த பிரதேசம் அதற்கேற்ற நீர்வளம் நிலவளம் மேய்ச்சல் தரைகள் சந்தை வாய்ப்பு என்பனவற்றைக் கொண்டுள்ளன.

ஆனால் தற்போது எம்மைக் குடியமர்த்த தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசம் இந்த வாய்ப்புக்கள் அற்ற பிரதேசம் ஆகும்.

'வெறும் குடியிருப்புக்கள் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானதல்ல" என்ற அடிப்படையில் எமது சம்மதம் இன்மையை ஏற்கனவே அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

எனினும் இம் முயற்சிகள் கைவிப்படாத சூழ்நிலையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் எமது நியாயபூர்வமான கோரிக்கைகளை தங்களிடம் தெரிவித்து அதற்கான பரிகாரத்தினை எதிர்பார்க்கின்றோம்.

1) இழந்த எமது இயல்பு வாழ்வை மீட்டுத்தந்து எமது சொந்தக் கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுங்கள்

2) எமது கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதியை இந்தியாவுக்கு வழங்கும் ஏற்பாட்டை மறு பரிசீலனை செய்யுங்கள்

3) எமது கிராமங்களை உள்ளடக்காத வகையில் அல்லது எமது குடியிருப்புக்களாவது பாதிக்கப்படாத வகையில் அடையாளம் கண்டு நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்

4) மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசத்தில் எம்மைக் குடியமர்த்த எடுக்கப்படும் முயற்சியினை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்

5) எமது மக்களுடன் கலந்தாலோசித்து மக்களின் வாழ்வுக்கும் எதிர்கால நன்மைக்கும் ஏற்றவிதத்தில் மீள்குடியேற்றத்தினை தொடர நடவடிக்கை எடுங்கள்.

காலம் காலமாக அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு நீண்ட துயரத்தினைச் சந்தித்து இன்று இயல்பு வாழ்வைப் பறிகொடுத்து நிர்க்கதியாகியுள்ள எமக்கு தங்களால் மட்டுமே விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இக் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

நாட்டின் தலைவர் என்ற வகையிலும் பெருமை மிக்க புத்த மதத்தினைப் பின்பற்றும் உத்தம தலைவன் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து ஒரு நியாயபூர்வமான முடிவுக்காய் காத்திருக்கின்றோம்."

இப்போது நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்? இவை தமிழர்களுக்கு எதிரான பச்சைத் துரோகம் இல்லையா? தமிழிழன விரோதம் கிடையாது என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது தமிழினத் துரோகம் இல்லையா?

இந்தத் தமிழினத் துரோகத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி இன்றில்லா விட்டாலும் இன்னொரு காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவர்களுக்கும் இவர்களுக்கு சாமரம் வீசும் உங்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று கூறியுள்ளார் நக்கீரன்.

Tags: lanka tamils, sudarsana nachiappan, canada padaipaligal kazhagam, cong, condemn, இலங்கைத் தமிழர்கள், சுதர்சன நாச்சியப்பன், கனடா படைப்பாளிகள் கழகம், காங்கிரஸ், கண்டனம்.

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



ஈ-மெயிலில் வந்தது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி
தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?
இந்த அருமையானக் கேள்வியை முன் வைத்த அன்பருக்கு நன்றி.
அதிருக்கட்டும் ஏனைய இந்திய மாநிலங்களில் வாழும்
இந்தி( யர்கள்)குடிமக்கள் தமிழ் நாட்டுத் தமிழர்களை
இந்தியர்களாக நினைக்கின்றார்களா?
எதற்கு கேட்கிறேன் என்றால்
வேம்பாய் நகரில் , குசராத்தில், அல்லது எந்த மாநிலத்தில்
என்ன நடந்தாலும் தமிழ் நாட்டுத்தமிழர்கள் உதவிக்கரம் நீட்டுங்கின்றனர்.
குரல் கொடுக்கின்றனர்.இன்னும் ஒரு படி மேலே போய் ஆந்திராவில் உலங்கு
வானூர்தி நேர்கையில் மாண்ட முதலமைச்சருக்கு தமிழ் நாட்டில் பொதுவிடுமூறை
இன்னமெல்லாமோ நடக்கிறது.இறந்தவர் யாராக இருந்தாலும் வருந்தவேண்டிய
ஒன்று.மாந்தநேய அடிப்படையில் வருத்தம் தெரிவிப்பது இயல்பே.ஆனால் இது
ஒரு புதிய முன்மாதிரி .இந்த முன் மாதிரியை ஆந்திராவோ ,வேறு இந்திய
மாநிலத்தவர் கடைப்பிடிக்கமாட்டார்கள் என்று தமிழக மக்கள் புரிந்து
வைத்துள்ளனர்.

பிற இந்திய மாநிலத்தவர் துயரில் பங்குக்கொள்ளும் தமிழருக்கு ஓர் இடர்
என்றால்
அதே அக்கறையை தமிழர் மீது பிற மாநிலத்தவர் காண்பிப்பதில்லையே ஏன்?
மொரிசீயசு, ஆசுத்திரியா இன்னும் எந்த நாட்டில் இந்தியருக்கு ஒன்று
என்றால்
ஒட்டுமொத்த இந்தியர்கள்,ஏன் நடுவன் அரசே தலையிட்டு தட்டிக் கேட்கிறது.
ஆனால் தமிழருக்கு ஒன்று என்றால் இந்திய அரசும் சரி ,ஏனைய இந்திய மாநில
மக்களும் கண்டுக்கொள்வதில்லையே?பர்மா,மொரிசியசு, மலேசியா ,இலங்கைத்தோட்ட
தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இவர்கள் குரல் கொடுக்காததேன்?
இந்திய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற நிலைப்பாடே இப்படியென்றால்
அந்த தமிழர்களின் தொப்பூழ்க்கொடி உறவுகளான ஈழத்தமிழர் நிலைப்பாட்டை
நான் எதுவும் சொல்வதற்கில்லை.அதை நீங்களே கண்க்கூடாக
பட்டறிந்திருப்பீர்கள்.
இதனால் தமிழ் நாட்டுத்தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்டார்களா
என்ற ஐயப்படு இருக்கும்போது அன்பர் மகிழ்நன் இந்த இந்த கேள்வியை
முன்வைத்துள்ளார். அதாவது

தமிழர்கள் மட்டும்தான் இந்தியர்களாக இருக்க வேண்டுமா?



அதேபோல் தமிழர்கள் தமிழ்தேசியம் அமைக்க குரல் கொடுக்கும்
தமிழ் உணர்வாளருக்கு எதிராக எழுதி வரும்
தெலுங்கரான மதிமாறனுக்கும் இதை சொல்லுங்கள்.
கன்னடன கருநாடகத்தை அமைத்து கன்னடனாகவுள்ளான்
தெலுங்கன் ஆந்திராவை அமைத்து தெலுங்கனாகவுள்ளான்
மலையாளி கேரளாவை அமைத்து மலையாளியாகவுள்ளான்
தமிழன் தமிழ்நாடு அமைத்து தமிழனாக இருக்கவிடாமல்
இந்த மூவரின் ஆதிக்கத்தில் திராவிடமாகமாக்கிவிட்டார்களே ?
அதன சூழ்ச்சியம் என்ன?
தமிழர் ஒற்றுமையாக தமிழன் என்ற இன உணர்வுடன் இருக்க
விரும்பும் தமிழர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பார்களா ?
இவண்
பண்டிதர் க.அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்
மூலம் ஈ,வெ,ரா.வுக்கு முன்பே பகுத்தறிவு பெற்ற
தங்கவயல் மக்கள் வாழும் நிலத்தில் பிறந்த தமிழன்
ஆம்பூர் பெ.மணியரசன்
செருமனி

புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம்: ஐ.நா. உயர் அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இலங்கை அரசு உத்தரவு

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்'ன் இலங்கைக்கான உயர் அதிகாரியாக ஜேம்ஸ் எல்டர், கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இருந்து பணியாற்றி வந்தார். இவர் யுனிசெப்' செய்தித்தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட போர் நடந்து வந்தபோது, போரில் குழந்தைகள் சிக்கி தவிப்பது குறித்து ஜேம்ஸ் எல்டர் அடிக்கடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இந்நிலையில், ஜேம்ஸ் எல்டரை இலங்கையை விட்டு உடனே வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டது. இலங்கையில் 2010 ம் ஆண்டுவரை வசிப்பதற்கான விசாவை ஜேம்ஸ் எல்டர் வைத்திருந்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக, ஜேம்ஸ் எல்டரின் விசா, இன்றுடன் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும், ஐ.நா. சார்பில் கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதால், ஜேம்ஸ் எல்டரின் விசா, வருகிற 21 ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக குடியேற்றப்பிரிவு அதிகாரி பி.பி.அபய்கூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் எல்டர், குழந்தைகள் மற்றும் நலிந்த பிரிவினர் சார்பில் குரல் கொடுத்து வந்ததாக யுனிசெப்' பிராந்திய தகவல் தொடர்பு தலைவர் சாரா க்ரவ் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் எல்டரின் விசா நிலவரம் குறித்த கூடுதல் தகவல்களை யுனிசெப்' கேட்டுள்ளது.

மகிந்தவுடன் த.தே.கூ. 2 மணி நேரம் பேச்சு: மீள்குடியேற்றத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்து


வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது.
மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார்.

இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்பர்கள் அல்லது உறவினர்களின் இல்லங்களில் சென்று வசிப்பதற்கு வசதி செய்துகொடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த மகிந்த, அது தொடர்பாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா அரச தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 5:00 மணியளில் தொடங்கிய பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர் மட்டக்குழு ஒன்று கலந்துகொண்டது.

பேச்சுவார்ததைகள் முடிவடைந்த பின்னர் அது தொடர்பாக இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்:

"சிறிலங்கா அரச தலைவருடனான இந்தப் பேச்சுவார்த்தைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. இதில் போரினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் முக்கியமாகக் குறிப்பிட்டோம். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்தினோம்.

இடம்பெயர்ந்த மக்களை 180 நாள் வேலைத்திட்டம் ஒன்றில் மீள்குடியேற்றுவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையில் அதில் 10 வீதமானவர்களைக் கூட அரசு மீள்குயேற்றவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அதனால் இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என நாம் இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக கேட்டுக்கொண்டோம்.

அவர்கள் கண்ணிவெடிகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்றவேண்டிய தேவை இருப்பதாக நீண்ட ஒரு விளக்கத்தைத் தந்தார்கள். ஆனால், கண்ணிவெடிகள் குறைவாக உள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அதன் மூலம் அந்தப் பகுதிகளில் உள்ளவர்களை முதலில் குடியேற்றக் கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.

இதனைவிட வவுனியாவில் உள்ள முகாம்களில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம். இங்குள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று வசிப்பதற்கு விரும்பினால் அவர்கள் அங்கு செல்வதற்கு அரசு அனுமதிப்பது அவசியம் எனவும் நாம் தெரிவித்தோம்" என சம்பந்தன் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மகிந்த, இவ்வாறான அறிவித்தல் ஒன்றை தாம் ஏற்கனவே வெளியிட்டிருப்பதாகவும் மேலும் அது தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இதன்படி முகாமில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு விரும்பினால் அதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மகிந்த சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வவுனியா முகாம்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிலளிப்பதாக மகிந்த வாக்குறுதியளித்திருக்கின்றார்.

இந்தப்பேச்சுக்களின் போது கடந்த மூன்று மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்க் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது.

இதற்குப் பதிலளித்த மகிந்த, சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முடிவடைந்து அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபனமானால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள். இதனை மகிந்த ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், இன்றைய சந்திப்பின்போது அது தொடர்பாக விரிவாக ஆராயப்படவில்லை. எதிர்வரும் சந்திப்புக்களில் இது தொடர்பாக ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

மகிந்தவுடனான இந்தப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பாக பசில் ராஜபக்ச தலைமையிலான அரச தலைவர் பணிக்குழுவுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது. இன்றைய பேச்சுக்கள் தொடர்பாக தமிழத் தேசியக் கூட்டமைப்பு திருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பில் மகிந்தவுடன் சுசில் பிரேம் ஜயந்த, ரிசாத் பதியுதீன், மகிந்தவின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு நலன்புரி முகாம்களுக்குப் பொறுப்பான படைத்தளபதி ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, சிவசக்தி ஆனந்தன், ஐ.எம்.இமாம் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

07 September, 2009

வலி தாங்க முடியவில்லைதான்... ஆயினும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை,

1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது''.

ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.

எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.

எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''

அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.

ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.

பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.

மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.

""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.

குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.

தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.

எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.''

உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.